Showing posts with label வாழ்த்துக்கள். Show all posts
Showing posts with label வாழ்த்துக்கள். Show all posts

20 November 2009

வாழ்த்தலாம் வாங்க

இன்று தன் பத்தாவது வயதில் அடியெடுத்து வைக்கும் மோனி @ மோனிகாவுக்கு (மோனிபுவன் அம்மாவின் மகள்)மனமார்ந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்






வாழ்வில் எல்லா நலங்களும், வளங்களும் பெற்று இனிதாய் வாழ வாழ்த்துவோம்.

09 October 2009

வாழ்த்தலாம் வாங்க

இது ஹாஜரின் முதல் மாதம்


இது பதினோராவது மாதம்



பத்தாம் தேதி, பத்தாம் மாதம் (அதாங்க,நாளைக்கு) ஹாஜர் தனது முதல் பிறந்தநாளைக் கொண்டாடப்போறாங்க.

வாங்க குழந்தைக்கு, நாமெல்லாம் சேர்ந்து கேக் தருவோம்.


தந்தாச்சா, இப்போ ஹாப்பி பர்த் டே சாங்க் பாடப்போறோம்


Happy Birthday to You
Happy Birthday to You
Happy Birthday Dear Haajar
Happy Birthday to You.

From good friends and true,
From old friends and new,
May good luck go with you,
And happiness too.


இந்தாங்க ஹாஜர் உங்களுக்கு பலூன், ரோஸஸ் அப்புறம் டோரா.







அன்பு நிறைந்த முதல் பிறந்தநாள் வாழ்த்துக்கள் குட்டிம்மா!!!

01 September 2009

வாழ்த்தலாம் வாங்க

இவர்களுக்கெல்லாம் இன்றைய நாள் இனியநாள், இந்த இனிய நாளை கொண்டாடும் இவர்களுக்கு எனது இதயம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்

கண்ணாடி ஜீவனின் மூத்தமகள் அமிர்தவர்ஷினி






சாரல் பூர்ணிமா சரவணக்குமாரின் மகன் பரீக்‌ஷித்



பிரவாகம் புகழ் ஜி3 என்ற காயத்ரி













MANY MORE HAPPY RETURNS OF THE DAY





டிஸ்கி: பிறந்தநாள் ட்ரீட்டிற்கு சம்பந்தப்பட்ட லிங்க்கினை அழுத்தி அணுகவும். ட்ரீட்டிற்கு கம்பெனி பொறுப்பாகாது. :))))))))))))))))))

13 August 2009

சின்னக் கண்ணா

பள்ளி விட்டு வீட்டுக்கு வந்த ஒரு மாலைப்பொழுது, அம்மா பக்கத்துவீட்டுல க்ருஷ்ணன் பாதமெல்லாம் வெச்சு க்ருஷ்ண ஜெயந்தி கொண்டாடறாங்கம்மா, நம்ம வீட்டுலயும் அதே மாதிரி செய்யலாம்மா.

நம்ம வீட்டுல அதெல்லாம் செய்யுற பழக்கமில்ல. போய் படிக்கிற வேலையப்பாரு.

ஏம்மா செய்யமாட்டோம்.

ம்ம், அதெல்லாம் மாடு கன்னு வெச்சிருக்கவங்கதான் செய்வாங்க. போ.

கொஞ்ச நேரம் கழிச்சு மறுபடியும் உள்ள போய், ம்மா, நம்ம வீட்டுலயும் ஊர்ல பெரிய மாமா, மாடு கன்னு எல்லாம் வெச்சிருக்குல்ல. நாமளும் செய்லாம்மா.

நீ ஒத வாங்கப்போறன்னு நெனைக்கிறேன்.வேணும்னா அடுத்த பஸ்ல ஊருக்கு ஏத்தி அனுப்புறேன்,போய்ட்டு வரியா. ப்போ, போயி ஒழுங்கா படிக்கிற வேலையைப்பாரு.

அப்போதிலிருந்து எனக்கு சின்ன சின்ன க்ருஷ்ணர் பாதங்கள் வைத்து கொண்டாடும் க்ருஷ்ண ஜெயந்தியின் மீது ஆவலும், ஈடுபாடும்.

எங்கள் வீட்டில் கொண்டாட முடியாவிட்டாலும், பள்ளியில் வருடந்தோறும் கொண்டாடுவார்கள், முந்தைய அலுவலகத்தில் சக ஊழியர்களில் சிலர் கொண்டாடி விட்டு முறுக்கு சீடையெல்லாம் தருவார்கள். பலகாரங்களை வாங்கும் போதே, க்ருஷ்ணன் பாதம் வெச்சீங்களா மேடம் / சார்னு கேட்டுக்கொண்டே அதன் கற்பனையோடும்தான் அவர்களிடமிருந்து வாங்குவேன்.

திருமணமாகி வந்தபிறகு, ஒரு நாள் ஆபீஸ் விட்டு வீட்டுக்கு வந்த மாலை, சஞ்சுவின் பாதங்களால் க்ருஷ்ணர் பாதமெல்லாம் வைத்து க்ருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டத்தில் வீட்டிலிருப்பவர்கள் ஈடுபாட செம குஷி. அம்மாவுக்கு போன் செய்து இன்னைக்கு எங்க வீட்டுல க்ருஷ்ணஜெயந்தி செய்றோமே என்று சொல்ல, சரியாத்தான் பேரு வெச்சிருக்கேன் உனக்கு யசோதா என்று சிரித்துக்கொண்டே சொன்னார்கள். அதற்கடுத்தவருடம் ஒரு நெருங்கிய உறவினரின் மரணத்தால் கொண்டாட முடியவில்லை.

இதோ இந்த வருடம், இன்று வர்ஷினியின் சின்ன சின்னப் பாதங்களை அச்சாக வைத்து க்ருஷ்ணன் பாதம் வைக்கவேண்டும். முறுக்கு, சீடை என்று பெருமுயற்சியிலெல்லாம் ஈடுபடாமல், நம்மால் முடிந்தவரைக்கும் பாலும் பழமும் வைத்து சின்னக்கண்ணனை எங்களின் கூட்டிற்கு கூப்பிடவேண்டும்.




நீல நிறத்தில், உருண்டை முகமும், பக்கத்தில் வெண்ணெய் பானை கவிழ்ந்து கிடக்க, புல்லாங்குழலை ஒரு கையின் பிடித்துக்கொண்டு, மயிற்பீலி தரையைத்தொடுமாறு ஒரு பக்கம் சாய்ந்தவாறு கடைவாய் சிரிப்போடு நம்மைப் பார்க்கும் சின்னக் கண்ணனின் படத்தைப் பார்க்க பார்க்க எவ்வளவு மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் வருகிறது.

கடவுளை குழந்தையாக பாவிக்கும் கருணை எவ்வளவு பெரியது. அதை எவ்வளவு அழகாகவும் நேர்த்தியாகவும் முன்னோர்கள் செய்து வைத்திருக்கிறார்கள். கடவுளை குழந்தையாக பாவிக்கும் கருணையை கொண்டாட, ஜாதியாவது, மதமாவது, மனமிருந்தால் போதாதா என்று இப்போது நினைக்கும் மனபக்குவத்தை வாய்க்க வைத்த கடவுளுக்கு நன்றிகள்.

அனைவருக்கும் கோகுலாஷ்டமி (கிருஷ்ணஜெயந்தி) வாழ்த்துக்கள்.

28 April 2009

வாழ்த்தலாம் வாங்க

சில பேரை பார்த்தவுடன் இன்னதுதான் காரணம் என்றே தெரியாமல் பிடித்துப் போய்விடும். அதுபோலவே சிலரின் எழுத்துக்களும். அவர் தம் எழுத்துக்களை வைத்து அவரைப் பற்றிய கற்பனையெல்லாம் வளர்ந்து கொண்டிருக்கும். பாலினம் தாண்டி எழுத்துக்களின் மேல் ஒரு இனம் புரியா சினேகம் ஏற்பட்டிருக்கும். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம், ஆமா இப்ப எதுக்கு இதெல்லாம் சொல்றீங்க என்று கேட்பவர்களுக்கு, இப்படித்தான் எழுத்தின் மேல் ஏற்பட்ட ஈர்ப்பால் மிகவும் பிடித்துப்போய், பின்னர் பின்னூட்டங்களால் ஒரு சினேகம் வளர்ந்தது. நாங்கள் அதிகம் பேசியதில்லை. பதிலாக அவர் தம் பதிவுகளையே முடிந்தவரை முதலாய் படித்து வைத்து, நேரில் பேசிய ஈர்ப்பினை உண்டு செய்துகொள்வேன். முதன் முதலாய் அவர்களைப் பார்த்தது கலைஞர் டி.வி.யில் காதலர் தினம் கவிதை வாசிப்பின் போதுதான். பச்சை புடவையில் வந்து, ஐந்தே நிமிடம்தான், அவசரமாய் ஒரு கவிதை படித்துவிட்டு போனார்கள். நிழல் பிம்பத்தின் மேல் ஒரு நிஜ பிம்பம் விழுந்தது. அந்த நிஜ பிம்பம் வேறு யாருமல்ல....
எழுத்தாளர், கவிஞர் பதிவர் உமாஷக்தி....




சரி அதுக்கென்ன இப்ப என்று கேட்பவர்களுக்கு, இப்ப எதுவும் இல்ல, நாளைக்குத்தான்.

நாளைக்குத்தான் (29.04.2009) அவங்களோட பிறந்தநாள்.

வாழ்த்துக்கள் தோழி

ஈரமும், மென்மையுமான உங்களின் எழுத்துக்களைப் போல, தித்திக்கும் தமிழ் போல, எத்திக்கும் புகழ் மணக்க, நீடுழி வாழ எனது வாழ்த்துக்கள் மற்றும் ப்ரார்த்தனைகள்

அப்படியே இன்னொரு பதிவருக்கும் வாழ்த்துக்கள் சொல்லிடுங்க.

என் பள்ளித் தோழியும், பதிவருமான மோனி புவன் அம்மா, அவங்களுக்கு (30.04.2009) அன்று பிறந்தநாள்.

வாழ்த்துக்கள் க்ருஷ்ணா....
பல வருடங்களுக்குப் பிறகு, நான் உனது பிறந்த நாளை ஞாபகம் வைத்திருந்து வாழ்த்துகிறேன், வாழ்த்தப் போகிறேன்.

06 March 2009

போராடும் பெண்மணிகள்

ஆணாதிக்க சமூகத்தில் புகுந்து புறப்பட்டு சாதித்தோம் என்றே அனேகப் பெண்களின் சாதனை விமர்சிக்கப்படுகிறது. ஆனால் சத்தமே இல்லாமல், முக்கியமாய் ஆணின் துணையே இல்லாமல் வாழ்ந்து, தன் பிள்ளைகளை சரி வர வளர்த்து, திருமணம் செய்து கொடுத்து, இன்னும் இன்ன பிற விளைவுகளை எல்லாம் சந்தித்த பெண்களைப் பற்றி பேசப்படும் பதிவுதான் இது. ஆணின் துணை இல்லாமல், அவர்களாய் விவாகரத்து என்ற பேரில் விலக்கிக்கொண்டதல்ல இது.
கணவன் இறந்தோ, இல்லை ஓடிப்போயோ இப்படியான விளைவுகளால் பாதிக்கப்பட்டு சமூகத்தில் தனக்கும் தன் பிள்ளைகளுக்கும் இன்னதென ஒரு அடையாளத்தை அமைத்துக்கொள்ள போராடும் பெண்களைப் பற்றிய பதிவே இது. சந்தேகமே இல்லாமல் இது ஒரு மகளிர் தின சிறப்புதான்.

என் பள்ளிக்கால வயதில் பார்த்த முனியம்மா - அரை டசன் பிள்ளைகள், 2 ஆண், 4 பெண், கணவன் இறந்த போது அவர்களின் மூத்த மகனுக்கு மட்டுமே திருமணமாகியிருந்தது. 2 பெண்கள் திருமண வயதில். இவர்களுக்கோ படிப்பறிவில்லை. வீட்டுக்கு வீடு பால் போட்டு, வீட்டு வேலை செய்து மட்டுமே தன் பிள்ளைகளை கரை ஏற்றினார்கள். ஒரு ஆணின் துணை எந்த இடத்திலெல்லாம் தேவையோ அந்த இடத்தையெல்லாம் தன்னை வைத்தே பூர்த்தி செய்துகொண்டார்கள். அவர்கள் மேல் முனீஸ்வரன் சாமி வரும் என்று சொல்லி ஒரு பாதுகாப்பை ஏற்படுத்திக்கொண்டார்கள் (!!!).

சரசக்கா - அக்காவின் தோழி, குடும்ப சண்டையின் காரணமாக பிரிந்து போன கணவர், தன் தாயிடமும், தந்தையிடமும் போய் சேர்ந்துவிட, அவர்கள் அவருக்கு 2ம் திருமணம் செய்துவைக்கும் போது, இவர்களுக்கு ஒரு வயது ஆண்குழந்தை.
இப்போது அவன் 11ம் வகுப்பு படிக்கிறான். இவரும் பகுதி நேரமாக வீட்டு வேலை செய்தே தன்னையும் தன் மகனையும் காப்பாற்றுகிறார். முழு நேரமாக ஒரு அலுவலகத்தில் காப்பி, டீ போட்டு கொடுக்கும் வேலை. தன்னை பாதுகாத்துக்கொள்வதோடு மட்டுமல்லாமல், சக குடும்ப உறுப்பினர்கள் (அண்ணன்கள், அண்ணிகள்) இவருக்கெல்லாம் உதவும் மனப்பான்மை. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்

லலிதாக்கா - கல்யாணம் செய்து கொள்ளும்போது இவரின் கருப்பு நிறம் தெரியாத கணவன், குழந்தை பிறந்த பின், இவரின் கருப்பு நிறம் உறுத்த கைவிடப்பட்டார். இவரும் வீட்டு வேலைதான். வீட்டு வேலை செய்தே தன் மகனுக்காக பாண்டிச்சேரியில் ஒரு சொந்த வீடு கட்டி வைத்துள்ளார். இவர் செய்த காரியம் இன்னும் எனக்கு வியப்பளிக்கும்

விதவை உதவிப்பணம் பெறுவதற்காக, விபூதி வைத்து போட்டொ எடுத்து அனுப்பி, விதவை உதவிப்பணம் பெறுகிறார். ஏங்க்கா இப்படி செய்தீங்க, ப்ரதீப் அப்பா தான் இருக்கிறாரே என்றால், அவரு இருப்பதனலா எனக்கு என்ன லாபம், அவர் இல்லையென்று சொன்னதால தானே எனக்கு கவர்ன்மெண்ட் 400 ரூபா கொடுக்குது. அது ஏதோ ஒரு செலவுக்கு ஆகுதில்லையா. இன்னவரைக்கும் அவர் எனக்கு ஒத்தை ரூபா சம்பாதித்து தரல, ஆனா உயிரோட இருக்காரு என்றார்கள்.
எதிர்த்து என்ன சொல்வதென்றே தெரியவில்லை எனக்கு.


என்னதான் அலுவலக உயரதிகாரியாய் இருந்தாலும், லட்சங்களில் சம்பாதித்தாலும் ஒரு பெண் தன்னை முழுமைப்படுத்திக்கொள்ளும் இடம் குடும்பம், குழந்தை, இதையிரண்டும் இவர்கள் மிகச்சரியாக செய்தார்கள் ஆண் துணையற்று.
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் இன்னும் ஏராளமனவர்களைப் பற்றி.

பெண்கள் தின வாழ்த்துக்கள் என்று இவர்களிடம் சொன்னால் என்னாதுடி, அன்னைக்கு டி.வில படம் போடுவானாடி என்று கேட்டுட்டு போகும் இவர்களை, என்னால் ஒரு பதிவிட்டு வாழ்த்த முடியும் என்பதே பெரும் பாக்கியம்.
வாழ்த்துக்கள் அம்மா, அக்காஸ். நீங்களும் வாழ்த்துவீர்கள் என்ற நம்பிக்கையோடு உலக மகளிருக்கும், உங்கள் வீட்டு மகளிருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்.

18 February 2009

யூத்ஃபுல் வெரி யூஸ்ஃபுல்

அங்கீகாரம் இந்த வார்த்தைக்கு நம்மால் தரப்படும் அங்கீகாரமே தனிதான்

அங்கீகாரத்துக்கு வயது வித்யாசமெல்லாம் கிடையாது. அது 1 வயதுன்னாலும் சரி, 100 வயதுன்னாலும் சரி.

அதுபோல நமது எண்ணங்களை எல்லாம் குழைத்து நாம் ஒரு கவிதையாகவோ, கட்டுரையாகவோ, புனைவாகவோ ................ இப்படி சொல்லிக்கொண்டே போகும் நமது முயற்சிகளுக்கு

ஒரு பின்னூட்டம் கிடைத்தாலே மகிழ்ந்துவிடுகிறோம். அதுவே ஒரு முத்திரைப் பத்திரிக்கையில் வெளியானால், நமக்கு ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. நமது அன்றாட அலுவல் சுமை, இன்னும் தனிப்பட்ட பிரச்சனைகளின் சுமை
எவ்வளவோ இருக்கும் போது இது போன்ற ஒரு தனித்த நிகழ்வு எல்லாவற்றையும் மறக்கச்செய்யும்.

இப்படி விகடன் பத்திரிக்கை நிறுவனத்தின், யூத்ஃபுல் விகடன் என்னும் மென்பத்திரிக்கையில் குட் ப்லாக்ஸ் என்ற தலைப்பின் கீழ் வெளியான படைப்பாளிகள் - தாமிரா, கார்க்கி, புதுகை தென்றல் இன்னும் இவ்வரிசையில் வந்த அனைவருக்கும் மனம் நிறைந்த பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்

இப்போ நட்புடன் ஜமாலின் வேதியியல் மாற்றங்கள்” என்னும் பதிவும் இதன் கீழ் வந்துள்ளது.

மீ த பர்ஸ்ட்டாய் அனேகரின் ப்லாக் பதிவுகளுக்கு முதலாவதாக வந்து பின்னூட்டமிடும் இவரை வாருங்கள் வாழ்த்துவோம்.

31 December 2008

என் இனிய வலைப்பூ மக்களே

2008 - எப்படி இருந்த நான் இப்படியாகிட்டேன், அப்படீன்னு எண்ண வைத்த வருடம்.

இரவும், பகலுமாய் துன்பமும் இன்பமும் சுழன்றுகொண்டுதான் இருந்தது. என்ன ஒரு விஷயம், எல்லாவற்றையும் ஒரு புரிதலுடன் அணுகியதால் சில நல்ல படிப்பினைகள் கிடைத்தது. அதனால் இதுவும் கடந்து போம் என்ற ஒரு மனப்பக்குவம் வாய்த்தது.
எல்லை மீறிய மனவருத்தங்களை இதுவும் கடந்து போம் என்று அந்தக்கணம் எடுத்துக்கொள்ளமுடியாவிட்டாலும், அக்கணங்களூடே அமைதியாய் கடந்து சென்றதில் ஒரு நல்ல ஒட்டுதலைக் கொடுத்தது நெருங்கிய உறவுகளுடன்.

மிக மிக முக்கியமாய் வலைப்பூ, இதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி தந்தது நெறைய் நட்பூக்கள் வளர்ந்து, வாசமிகு தோட்டத்தால் எப்போதும் மணக்கிறது என் ஜி.மெயில்.
அதுவரை நேரம் கிடைக்கும் போது வலைப்பூவை படிக்க மட்டுமே செய்வேன். முதல் முதல் நான் பின்னூட்டம் போட்ட வலைப்பூ திரு. ரசிகவ் ஞானியாரின் விதைகள், பின்னூட்டம் போடத் தெரியாததால்(!?!) தனி மெயில் அனுப்பினேன்.
பின்பு அவரின் உதவியால் தொடங்கியதே இந்த “மழை”.

குழந்தைகளின் உடலையும் உணவையும் மட்டும் சரியாக கவனிப்பது மட்டுமே ஒரு தாயின் தலையாய கடமையாக எண்ணிய எனக்கு, இல்லை மனதையும் என்று அறிவுறுத்தியது கீழ் வரும் ப்லாகர்ஸின் ப்லாக்ஸ்.
ஒரு சுபயோக சுபதினத்தில் பார்த்தது திருமதி. சந்தனமுல்லை அவர்களின் பதிவு, மிகவும் நெகிழ்ந்தேன் அவர்களின் மகள் பப்பு பற்றி அவர் எழுதியதைப் படித்துவிட்டு. இப்படியும் அம்மாவாய் இருக்கமுடியும் என்று தோன்றியது அப்போதுதான்,
அதுவரை வேலைக்கும் போய், வீட்டையும் கவனித்து, குழந்தையை சரி வர கவனிக்க இயலாமல் ஒரு வித மன உழற்சியில் மாட்டிக்கொண்டு இருந்தேன்.
தெளிவடைந்தது இவர்களால் தான், நன்றி என்ற சொல் என்ன கைம்மாறை தந்துவிடும், எங்கோ இருந்து கொண்டு எண்ணங்களால் வார்த்தைகளுக்கு வண்ணம் பூசிக்கொண்டிருக்கும் என்னால்.

1. சந்தனமுல்லை
2. அமுதா (என் வானம்)
3. தீஷூ அம்மா (பூந்தளிர்)

இதற்கப்புறம், இவர்களுக்கு பின்னூட்டம் இடுபவர்களை பின் தொடர்ந்து கொண்டே போனதில் ஏகப்பட்ட ப்லாகர்ஸின் எழுத்துக்கள் அறிமுகமாயின. என் கற்பனைப்பசிக்கு நல்லதொரு தீனியாய் அசை போட அமைந்தவைகள் நிறைய பேருடைய எழுத்துக்கள்.

திருமதி. துளசி கோபாலுடைய துளசிதளம் - இவரின் அக்கா பதிவு என்னை மிகவும் பாதித்தது

திரு. ஜீவன் (கண்ணாடி) - ஏனோ இவரின் ஃபோட்டோ சாயல் எனது அண்ணனை நினைவு படுத்துகிறது. இவரது எழுத்தில் ஒரு ஈர்ப்பு இருக்கிறது. அவரின் பிரசவம் பற்றிய ஒரு பதிவும், புகைப்பிடிப்பதைப் பற்றிய பதிவும் அருமை.

திரு. தாமிரா - இவரின் பப்புவும் சந்தனமுல்லையும் பதிவும் இன்னமும் இனிக்கிறது

திரு. ஆயில்யன் - இவரின் எழுத்துக்களும் அட போட வைக்கும் ரகமே (இவரின் பதிவுக்கு வரும் பின்னூட்டங்களும், அதற்கு இவர் தரும் மறுமொழியும் எனக்கு அதிகம் பிடித்திருக்கிறது)

திரு. குடுகுடுப்பையார் - நையாண்டியாக்கு குறைவு வைக்காத மனிதர்

திரு. பழமைபேசியார் - கொசுவத்தி சுத்த வைக்கும் பதிவுகளுக்கு சொந்தக்காரர். எனது வேண்டுகோள்களை உடனுக்குடன் நிறைவேற்றி வைத்துவிடுகிறார்.

திரு. கார்க்கி - நக்கலும் நையாண்டியுமாய், ஒரு யூத் எஃபெக்ட்

திரு. ஸ்ரீமதி - படமும், கவிதையுமாய் காதல் கலக்கல்.

திரு. அதிரை ஜமால் - பின்னூட்ட பெரியசாமியான இவரின், ”வரவு செலவு” எக்செல் ஃபைல் பதிவு எல்லோருக்கும் உபயோகமான ஒன்று.

இவர்களின் வரிசையில் இன்னும் நிறைய பேரின் எழுத்துக்கள் அட போட வைக்கிறது,

எனக்கு இடப்படும் பின்னூட்டங்கள் அனைத்தும் ஒரு பொன்னூட்டமாய், என்னை என்றும் ஊக்கப்படுத்திக்கொண்டே இருக்கிறது.
சிறப்பு வணக்கங்கள் என்னை(யு)ம் பின் தொடரும் அந்த 27 பேருக்கு.

இனி அவ்வளவுதான் என்று நான் மூட்டை கட்டி வைத்த என் கற்பனைகளுக்கும், கவிதைகளுக்கும் நல்ல விதமாய் வெளிக்கொண்டு வந்த இந்த 2008க்கு இன்னும் எவ்வளவோ செய்யலாம், ஆனால் இன்றோடு முடிந்து விடப்போகும் இந்த வருடத்திற்கு, என்ன செய்ய முடிந்து விடும் என்னால், இனிவரும் வருடத்தை இனிமையாய் எதிர்கொள்வதை விட.

”வருங்காலம் இன்பம் என்று நிகழ்காலம் கூறும் கண்ணே” (அருமையான ஒரு பாடலின் அற்புதமான வரிதான் இது.)

இப்படியே வாழ்ந்துவிட்டால் போகிறது. என்ன இருக்கிறது இந்த அறைகுறை வாழ்வில்
இயற்கையின் சுனாமியோ, பூமி அதிர்ச்சியோ இல்லை செயற்கையின் ஒரு அணுகுண்டு வீச்சோ என்ன மிச்சம் வைத்துவிட்டு போகும் நம் வாழ்வில், ஒருவருக்கொருவர் அண்டி வாழும் வாழ்வில் வரும் அன்பையும் அனுசரணைப் பேச்சுகளையும், செய்யும் உதவிகளையும் விட....

நம் தேவைகள் என்றும் குறையப்போவதில்ல, இது போதும் என்று நினைக்கும் போதே, இன்னொன்றின் தேவை அந்த இடத்தை நிரப்பியிருக்கும்.

கூடுமானவரையில் நம் இயல்பு வாழ்க்கையில் கோபம் தவிர்த்து, போட்டிகள் அன்றி, பொறமையை பொசுக்கி, அகந்தையை அழித்து, எல்லாவிடங்களிலும் அன்பையும், புன்சிரிப்பையும் மட்டுமே நிரப்பி ஒரு புதிய வாழ்தலுக்கு முயற்சிப்போம் இனியேனும்.

அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் 2009

14 November 2008

குழந்தைகள் நாள் வாழ்த்துக்கள்


Add Image



சின்னக்குழந்தைகளே
செல்லக்குழந்தைகளே
ஆடுங்களேன்
பண்பாடுங்களேன்
நம் தேவன் துணைக்கு வந்தான்.
உங்கள் குழந்தைகளுக்கும், உலகக்குழந்தைகளுக்கும் அமிர்தவர்ஷினி மற்றும் அமிர்தவர்ஷினி அம்மாவின் குழந்தைகள் நாள் வாழ்த்துக்கள்.
















30 September 2008

புனிதப் பெருநாள் வாழ்த்துக்கள்.




ரசிகவ் ஞானியார், அப்துல்லா சார் மற்றும் அனைத்து இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு
புனிதப் பெருநாள் வாழ்த்துக்கள்.