அதுதான் கதை, மேற்கொண்டு படியுங்கள்
ஒரு சிறுவனும், சிறுமியும் விளையாடிக்கொண்டிருந்தார்கள். அந்தச் சிறுவன் நிறைய விதவிதமான கூழாங்கற்கள் வைத்திருந்தான். சிறுமி தன்னிடம் இனிப்பு பண்டங்களை வைத்திருந்தாள். அவளிடம் வைத்திருந்த இனிப்பு பண்டங்களின் மீது ஆசை கொண்டஅச்சிறுவன், அச்சிறுமியிடம் நான் எனது கூழாங்கற்களை உனக்குத் தருகிறேன். அதற்குப் பதிலாக உன்னிடம் இருக்கும் இனிப்பை தருகிறாயா, எனக்கு சாப்பிட வேண்டும் போல இருக்கிறது என்றான்.
இதற்கு ஒப்புக்கொண்ட அச்சிறுமி தன்னிடமிருந்த அத்தனை இனிப்பு பண்டங்களையும் கொடுத்துவிட்டாள், பதிலுக்கு அச்சிறுவனும் கூழாங்கற்களை கொடுத்தான், ஆனால் மிகவும் அழகாகவும், பெரிதாகவும் இருந்த கூழாங்கற்களை அவன் தன்னிடமே மறைத்து வைத்துக்கொண்டான்
விளையாடி முடித்தபின் இருவரும் தத்தம் வீட்டுக்கு சென்றனர். அன்றைய நாளின் இரவு அச் சிறுமி நன்றாக உறங்கினாள். ஆனால் அந்தச் சிறுவனோ, அன்று நடந்த நிகழ்ச்சியையே மீண்டும் மீண்டும் யோசித்துக் கொண்டிருந்தான். மறைத்து வைத்த அந்த கூழாங்கல்லை பார்த்தவாறே, நாம் மறைத்தது போல, அவள் என்ன திண்பண்டத்தை நம்மிடம் கொடுக்காமல் மறைத்திருப்பாள் என்று யோசித்துக் கொண்டிருந்ததில் அவனுக்கு உறக்கம் வரவில்லை.
இந்தக் கதையினால் அறியப்படும் நீதி:
உன்னிடமிருக்கும் 100 சதவிகித அன்பையும் உன்னை நம்புமொருவருக்கோ, உன்னைச் சார்ந்திருப்பவருக்கோ கொடுக்க முடியாமல் போனால்,
நீ எப்போதும் அடுத்தவரின் அன்பு நம் மீது 100 சதவிகிதம் இருக்காது என்ற குறையுடனே இருப்பாய்.
இந்த நீதி காதல், நட்பு, மேலாளர் - தொழிலாளி என எல்லா உறவுகளுக்குமே பொருந்தும்.
நூற்றுக்கு நூறை கொடுங்கள் , அதையே திரும்பப் பெறுங்கள்
