15 December 2008

மார்கழி நினைவுகள்

”மாதங்களில் அவள் மார்கழி” இந்தப் பாட்டைப் போல, பாட்டில் வரும் இந்த வரியினைப்போல எனக்கு ரொம்ப பிடிச்ச ஒரு மாசம் மார்கழி. அது ஏனோ தெரியல, என்ன மாயமோ புரியல இந்த மாசத்துக்கு மட்டும் ஒரு தனி வாசம் இருக்கத்தான் செய்யுது.

இந்த மாசத்தின் வாசம் பிடிக்க வைக்கும் காரணங்கள்:

1. தூக்கம்: எழுப்ப எழுப்ப இழுத்து போத்திட்டு தூங்க வைக்கும். அப்படி ஒரு தூக்கம் கண்ணை பிடுங்கும் காலம் இது, இந்த விசயத்துல மத்த மாசமெல்லாம் பிச்சை வாங்கனும் மார்கழியிடம்.

2. கோலம்: முன்ன சொன்னது இதுல வொர்க் அவுட் ஆகாதுங்கோ இங்கன, அதான் சீக்கிரமே எழுந்து தெருவடைச்சு கோலம் போடனுமில்ல. இல்லனா எதிர் வீட்டுக்காரவுங்களுக்கு பாதி இடம் போயிடுமே.

யப்பா, அரிசி மாவு கலக்கறதென்ன, கலர் பொடி தூவுறதென்ன, ச்சே. இதெல்லாம் தானா வரணும். ஆனா நமக்கு அஞ்சு புள்ளி தாண்டாது. சிக்கு கோலம் சுத்தமா போட வராது.

ஸ்கூல் படிக்கும் போது, பால் வாங்கப் போகும் பொடிசுகளெல்லாம் (நாங்கதான்) ஒன்னா சேந்துகிட்டு பால் தூக்கு கையில, தலையில ஒரு துண்டுன்னு (பனி காதுல போயிடக்கூடாதாம், அவ்வளவு அக்கறை பட்ட மகராசிங்க போய் பால் வாங்க வேண்டியதுதானே) அதுதான் நடக்காது, நாமதான் நடந்து போய் வாங்கணும்.) கெளம்பிடுவோம்.
பால் பூத் போற வழியெல்லாம் மக்கள்ஸ் கோலம் போட்டுகிட்டிருப்பாங்க. நாங்களும் எந்தக் கோலம் நல்லாருக்கோ அதுக்கு மார்க் போட்டுட்டு போய் வருவோம். இந்தப் பணி இப்போதும் தொடருகிறது. என் மனசுல மார்க் போட்டுடுவேன் அழகான கோலத்துக்கு.

3. புளியோதரை, சுண்டல்: எங்கள் வீட்டு எதிரிலேயே இருக்கும் பெருமாள் கோயிலில் உருப்படியாய் செய்யப்படும் உபயம் இதுதான். ஆஹா மணக்க மணக்க புளியோதரை, எப்பவாச்சும் சக்கரைபொங்கல், சுண்டல் தெனைக்கும். சிறிசு, பெரிசுன்னு ஒரு பெரிய்ய க்யூவே நிக்கும். வீட்டு காம்பவுண்ட்ல இருக்குற எல்லாரும் போய் வாங்கிட்டு வருவாங்க. எங்க காலியாயுடுமோன்னு மனசு பதக் பதக்குன்னு அடிச்சுக்கும். சரியா எங்க வீட்டு சாமி குளிக்க போகும்போது (மாமா மாலை போட்டு ஒரு மண்டலம் சாமியாய்டுவாரு)
நாங்க எஸ்கேப். நாங்கன்னா நானும், எங்கக்கா பொண்ணும், ஒரு கால் வீட்டுல, ஒரு கால் கோயில்ல, எங்க பயத்தை புரிஞ்சிகிட்டு யாராச்சும் மொதல்ல எங்களுக்கு கொடுத்து வுட்ருவாங்க. அப்படி யாராச்சும் சரியான ஆள் அமையலனா, அன்னைக்கு நமக்கு திண்டாட்டம்தான், மண்டகப்படிதான்.
ம்ஹீம், இன்னமும் கோயில்ல கொடுக்கத்தான் செய்றாங்க, வாங்க நாங்களுமில்ல, தின்ன பொழுதுமில்ல.

4. ஆண்டாள்: வடிவான மாலையும், வலது பக்கம் சாய்ந்த கொண்டையுமாய் சூடிக்கொடுத்த சுடர்கொடி ஆண்டாளின் உருவம் என் மனதில் அப்படியே பச்சை குத்தினாற் போல. ஆரம்பம் முதலே எனக்கு பிடிக்கும், ஆனால் இந்த விஷயத்தில் யாரும் திரி தூண்டி விடவேயில்லை.
இது நல்லா வெவரம் தெரிஞ்சு வேலைக்கு போக ஆரம்பித்த பின்னர் வந்த பழக்கம். முடிந்தவரை ஆண்டாள் விக்ரகம் இருக்கும் கோயிலாகப் பார்த்து சென்று, அப்படியே கண்ணோடு கண் நோக்கி பேசி விட்டு வருவது. இந்த பழக்கம் என் அக்கா பொண்ணின் ப்ரெண்ட் ஆரம்பிச்சு வெச்சா. அப்படியே தொத்திக்கிச்சு, கல்யாணம் ஆகிற வரைக்கும் முடிந்தவரை ஆபிஸ் முடிஞ்சா ஆண்டாள் கோயில்னு இருந்தேன்.
அவளும் மார்கழி மாதம், அதிகாலைக் குளியல், அப்படியே ஆண்டாள் கோயில், என நடையா நடந்தா, ஆனா இன்னிக்கு வரைக்கும் கல்யாணம் ஆகவில்லை. அவங்க அம்மாவுக்கு எப்போது போன் செய்தாலும் அழ ஆரம்பித்து விடுகிறார்கள். கூடவே என்னை அவளுக்கு மாப்பிள்ளை பார்க்கும் வேலையையும் வைத்து விடுகிறார்கள்.
நானும் முயற்சித்து கொண்டுதான் இருக்கிறேன். ஆண்டாள் தான் மனசு வைக்க வேண்டும்.

5. திருப்பாவை: மார்கழி மாதத்தின் அழகுக்கு அழகு சேர்ப்பதே, திருப்பாவையின் பாசுரங்கள் தான். இதை வாசித்தேன் என்பதை விடவும் சுவாசித்தேன் என்றுதான் கூறவேண்டும்.
மார்கழி மாதத்தில் இன்னும் எனக்காய் மிச்சமிருப்பது இது ஒன்று மட்டுமே.
நான் படித்த பள்ளியில் இம் மாதத்தில் தினமும் ஒரு பாசுரத்தை பாடலாய் பாடுவார்கள். இதில் வரும் ஒரு பாசுரத்தில், இளஞ்சிங்கம் என்று முடிந்தவுடன் ப்ரேயரில் நின்று கொண்டிருக்கும் எங்கள் க்ளாஸ் பெண்கள் அனைவரும் என்னையே பார்த்துக்கொண்டிருப்பார்கள். வெட்கம் பிடுங்கித்தின்னும். பின்ன நாம இளங்குரங்குக்கு கூட வழி இல்லாம நோஞ்சானா இருப்போம், அதுல இளஞ்சிங்கம்னு வந்துதுன்னா, அன்னைக்கு மதியானம் வரைக்கும் அவர்களின் வாய்க்கு என் பெயர்தான் அவல். அவ்வளவு பேர் போன ஆள் நானு.

இப்படியாய் இன்று கார்த்திகை போய் நாளை எனக்குப் பிடித்த மார்கழி வரப்போகிறது. இதில் என்ன இருக்கிறது என்கிறீர்களா, ஆமா இந்த தடவை பாசுரம் படிக்கும்போது அமித்து என்னோட இருப்பா இல்ல. ஆண்டாளுக்கு பாசுரம் சொல்ல இன்னொரு ஆள் ரெடியாகிட்டிருக்காங்கல்ல.
அமித்துவுக்கும் ஆண்டாள் பிடிக்காமலா போயிடும்.

40 comments:

சந்தனமுல்லை said...

:-)) குத்துவிளக்குங்களோட தொல்லை தாங்க முடியலைப்பா! ;-))

நல்லாருந்துச்சு உங்க மார்கழி நினைவுகள்!

பழமைபேசி said...

மார்கழி மாதம், நினைச்சாலே குதூகலமா இருக்கு.... பஜனைக்கு போவது அவ்வளவு பிரியம் நமக்கு!

butterfly Surya said...

அதனால் தான் கண்ணதாசன் மாதங்களில் அவள் "மார்கழி" என்றார்..

ஜனவரி முதல் தேதி கட்டாயம் வில்லிபுத்தூர் போய் ஆண்டாளை தரிசிக்க முடிவு..

அவள் (இல்லத்தரசி) உத்தரவும் அதுதான்..

நட்புடன் ஜமால் said...

நான் கூட ரங்கோளி கோலமெல்லாம் போட்டிருக்கேன்.

தமிழ் அமுதன் said...

மார்கழி மாசம்னா எனக்கும் கோலம்தான்
நினைவுக்கு வருது!

எங்க ஊருல நமக்கு ''வேண்டப்பட்ட'' புள்ளைங்க
எல்லாம் அதி காலைல எந்திருச்சி கோலம்
போட்டுக்கிட்டு இருப்பாங்க! எல்லோரையும்
ஒரு ரவுண்டு பார்த்துடலாம்!
சைக்கிள நிப்பாட்டி கோலத்த ரசிக்கிறது போல
ஒரு லுக்கு உட்டா அதுங்களுக்கு பெருமை
தாங்காது!

ரோடு புல்லா போட்டுருக்குற கோலத்து மேல
சைக்கிள விடாம ஒதுங்கி போனா அதவிட
சந்தோசம் அவங்களுக்கு!

(மாலை போட்டு இருக்குற நேரத்துல
போய் இதெல்லாம் நினைவுக்கு வருது
எல்லாத்துக்கும் அமிர்த வர்ஷினி அம்மாதான்
காரணம். சாமியே சரணம் அய்யப்பா)

நட்புடன் ஜமால் said...

\\1. தூக்கம்: எழுப்ப எழுப்ப இழுத்து போத்திட்டு தூங்க வைக்கும். அப்படி ஒரு தூக்கம் கண்ணை பிடுங்கும் காலம் இது, இந்த விசயத்துல மத்த மாசமெல்லாம் பிச்சை வாங்கனும் மார்கழியிடம்.\\


ஆஹா ஆஹா

குளிர்-ன்னாலே தூக்கம்.

சில விஷயங்கள் சொல்லில் அடங்கா

ஆயில்யன் said...

/பால் பூத் போற வழியெல்லாம் மக்கள்ஸ் கோலம் போட்டுகிட்டிருப்பாங்க. நாங்களும் எந்தக் கோலம் நல்லாருக்கோ அதுக்கு மார்க் போட்டுட்டு போய் வருவோம். இந்தப் பணி இப்போதும் தொடருகிறது. என் மனசுல மார்க் போட்டுடுவேன் அழகான கோலத்துக்கு.

///


எனக்கும் ஞாபகம் வந்திருச்சு :)

நட்புடன் ஜமால் said...

\\ ஜீவன் said...
மார்கழி மாசம்னா எனக்கும் கோலம்தான்
நினைவுக்கு வருது!

எங்க ஊருல நமக்கு ''வேண்டப்பட்ட'' புள்ளைங்க
எல்லாம் அதி காலைல எந்திருச்சி கோலம்
போட்டுக்கிட்டு இருப்பாங்க! எல்லோரையும்
ஒரு ரவுண்டு பார்த்துடலாம்!
சைக்கிள நிப்பாட்டி கோலத்த ரசிக்கிறது போல
ஒரு லுக்கு உட்டா அதுங்களுக்கு பெருமை
தாங்காது!\\


அண்ணா - ஹூம்ம்ம் இப்ப சொல்ல கூடாது - போய்ட்டு வாங்க நல்லபடியா

ஆயில்யன் said...

//எங்க ஊருல நமக்கு ''வேண்டப்பட்ட'' புள்ளைங்க
எல்லாம் அதி காலைல எந்திருச்சி கோலம்
போட்டுக்கிட்டு இருப்பாங்க! எல்லோரையும்
ஒரு ரவுண்டு பார்த்துடலாம்!
சைக்கிள நிப்பாட்டி கோலத்த ரசிக்கிறது போல
ஒரு லுக்கு உட்டா அதுங்களுக்கு பெருமை
தாங்காது!
///


எனக்கு இந்தளவுக்கு ராசி இல்ல :((

எல்லாம் வேண்டப்படாததாவே இருந்தாங்கப்பு :(((

ஆயில்யன் said...

//ரோடு புல்லா போட்டுருக்குற கோலத்து மேல
சைக்கிள விடாம ஒதுங்கி போனா அதவிட
சந்தோசம் அவங்களுக்கு!///


நார்மல ஒதுங்கி போனாலும் பட் என்னமோ கோலம் கொஞ்சம் கூட டச் ஆகிடக்கூடாதேன்னு கவனம் வைச்சு போற ஸ்டைல்லு இருக்கே !

ஹய்யோ !

ஹய்யோ!!

Raghav said...

அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய், ஆழ்வார்கள் தம் செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய்” என்று ஆண்டாளை புகழ்வர்.

ஆண்டாளுக்குரிய மார்கழி மாதத்தை அழகுற நினைவுபடுத்திட்டீங்க.

எங்க ஊர் பெருமாள் கோயில்ல நெய் வழியும் சர்க்கரை பொங்கலுக்காகவே நான் சீக்கிரம் எந்திரிப்பேன்.. லேட்டா போனாலும் கிடைக்கும் ஆனா சூடா இருந்தா தானே சூப்பரா இருக்கும்.

RAMYA said...

//
அதிரை ஜமால் said...
நான் கூட ரங்கோளி கோலமெல்லாம் போட்டிருக்கேன்.

//

ரங்கோலி கோலம் போட்ட ஜமால் கைகளுக்கு
ஒரு பட்டம் கொடுங்கப்பா அமித்து கையாலே
இதெல்லாம் வேறையா

RAMYA said...

//
ஜீவன் said...
மார்கழி மாசம்னா எனக்கும் கோலம்தான்
நினைவுக்கு வருது!

எங்க ஊருல நமக்கு ''வேண்டப்பட்ட'' புள்ளைங்க
எல்லாம் அதி காலைல எந்திருச்சி கோலம்
போட்டுக்கிட்டு இருப்பாங்க! எல்லோரையும்
ஒரு ரவுண்டு பார்த்துடலாம்!
சைக்கிள நிப்பாட்டி கோலத்த ரசிக்கிறது போல
ஒரு லுக்கு உட்டா அதுங்களுக்கு பெருமை
தாங்காது!

ரோடு புல்லா போட்டுருக்குற கோலத்து மேல
சைக்கிள விடாம ஒதுங்கி போனா அதவிட
சந்தோசம் அவங்களுக்கு!

(மாலை போட்டு இருக்குற நேரத்துல
போய் இதெல்லாம் நினைவுக்கு வருது
எல்லாத்துக்கும் அமிர்த வர்ஷினி அம்மாதான்
காரணம். சாமியே சரணம் அய்யப்பா)
//

அந்த சைக்கிள் இப்போ எங்கே
கொடுத்தால் யாரக்கவது கொடுக்கலாம்
மார்கழி மாதத்தில் கொஞ்சம் உபயோகமாக இருக்கும்

ட்ரிங் ட்ரிங் தங்கமணி
கொஞ்சம் இங்கே வாங்க

ஜீவன் சைக்கிள் கதை சொல்லறாரு
ரொம்ப intresting ஆ இருக்கு

RAMYA said...

//
திருப்பாவை: மார்கழி மாதத்தின் அழகுக்கு அழகு சேர்ப்பதே, திருப்பாவையின் பாசுரங்கள் தான். இதை வாசித்தேன் என்பதை விடவும் சுவாசித்தேன் என்றுதான் கூறவேண்டும்.
//

ஆமாம் அமித்து அம்மா
மார்கழி மாதம் வந்தாலே
இவை எல்லாம் நம்மை
எங்கோ கொண்டு செல்லும்
சக்தி படித்தவை
அப்படியே கடவுளுடன் ஐக்கியமாக விட மாட்டோமா என்று ஒரே ஏக்கமாக இருக்கும் எனக்கு.

மார்கழி மாத காலை
பனியில் நனைந்தால்
சுகமே சுகம் தான்
அதற்கு ஈடு எதுவுமே இல்லை
என்று தான் கூறவேண்டும்

Dhiyana said...

மார்கழியில் எனக்கும் திருப்பாவை தான் பிடிக்கும். திருமணத்திற்கு முன் மார்கழியில் பால், பால் சார்ந்த பொருட்கள், பூ (திருப்பாவை நெய் உண்ணோம், பால் உண்ணோம்..) முதலியன உபயோகப்படுத்த மாட்டோம். நல்ல கணவர் கிடைப்பதற்காக. :-)

அண்ணன் வணங்காமுடி said...

உண்மைலயே நீங்க சொல்லறது சரி...

மார்கழி மாதம் சுகமான தூக்கம்.
வாய்க்கு ருசியா உண்ட கட்டி (புளியோதரை, சுண்டல்).
கலர் கலரா கோலம் போடும் கலர்ஸ்
காது குளிர ஆண்டாள் பாசுரம்.

வாவ்... சூப்பர். நினைத்தலே இனிக்கும்...

அற்புதம்...

அமுதா said...

ம்...நல்ல நினைவுகள். நான் கூட முன்னொரு காலத்தில 5 மணிக்கு வாசல் அடைச்சு கோலம் போடுவேன். நீங்க வர்றேனு சொல்லுங்க , கோலம் போடறேன், நீங்க மார்க் போடுங்க.. ;-)

தமிழ் தோழி said...

உங்க சின்ன வயசு சம்பவத்தை சொன்னீங்க படிக்க சுவாரஸ்யமா இருந்தது.
எங்க வீட்டு மாடியில குடி இருந்தவங்க கோலம் போடுவாங்க. ரொம்ப அழகா இருக்கும்

சங்கரராம் said...

மார்கழி மாசம்ன எனக்கு கோவில்ல கிடைக்கிற தயிர்சாதம்தான் நினைவுக்கு வருது

நட்புடன் ஜமால் said...

\\Blogger RAMYA said...

//
அதிரை ஜமால் said...
நான் கூட ரங்கோளி கோலமெல்லாம் போட்டிருக்கேன்.

//

ரங்கோலி கோலம் போட்ட ஜமால் கைகளுக்கு
ஒரு பட்டம் கொடுங்கப்பா அமித்து கையாலே
இதெல்லாம் வேறையா\\

எங்கே என் பட்டம்

ஓஹ்! இந்த பட்டமா வேண்டாம் அமித்து அம்மா ரம்யாக்கே கொடுத்துடுங்க அவங்களும் “படையப்பா”லேர்ந்து முயற்சி பண்றாங்க கிடைக்கல. “சந்திரமுகி”லயாவது கிடைச்சிருக்கனும்

ஹும்ம்ம்...

துளசி கோபால் said...

நினைவுகள் அருமை.

என்னையும் கொசுவத்தி சுத்த வச்சுட்டீங்க.

திருப்பாவை, திருவெம்பாவை & திருப்பள்ளி எழுச்சி அறுவதும் மனப்பாடம் செஞ்சு பாடி போட்டியில் கலந்துக்கிட்டு தங்கக்காசு(????) பரிசு வாங்குனேன்.

அந்தத் தங்கக்காசு எடையா இப்ப முக்கியம்:-))))))

ஆனா அப்போ அம்மா இருந்த காலம்.

Vidhya Chandrasekaran said...

அமித்து அம்மா உங்களுக்கு 5 புள்ளி கோலம் தான் தெரியுமா? எனக்கு ஏழு புள்ளி வரைக்கும் தெரியும்:)

சந்தனமுல்லை said...

ஆயில்ஸ்..

//எனக்கு இந்தளவுக்கு ராசி இல்ல :((

எல்லாம் வேண்டப்படாததாவே இருந்தாங்கப்பு :(((///

ஏன்?? அவ்வளவு சண்டையா?? :-)))

சந்தனமுல்லை said...

ஆயில்யன் said...
//எனக்கும் ஞாபகம் வந்திருச்சு :)//

ம்ம்..அப்படியேதான்..இன்னும் கொஞ்சம் யோசிச்சி என்னென்ன பண்ணீங்கன்னு சொல்லுங்க பார்க்கலாம்!!

சந்தனமுல்லை said...

//நார்மல ஒதுங்கி போனாலும் பட் என்னமோ கோலம் கொஞ்சம் கூட டச் ஆகிடக்கூடாதேன்னு கவனம் வைச்சு போற ஸ்டைல்லு இருக்கே !//

:-)) அப்படி போய்தான் நிஜமா நல்லவன் அண்ணா உளுந்து பெருங்காயம் வாங்கினார்..நீங்க??

ஆயில்யன் said...

//சந்தனமுல்லை said...
ஆயில்ஸ்..

//எனக்கு இந்தளவுக்கு ராசி இல்ல :((

எல்லாம் வேண்டப்படாததாவே இருந்தாங்கப்பு :(((///

ஏன்?? அவ்வளவு சண்டையா?? :-)))
//

ஹய்யோஓஓஓ

தங்கச்சி என்னிய நீங்க கிண்டல் பண்றீங்கோ!!!!

எனக்கு வெக்கம் வெக்கமா வருது!!!

ஆயில்யன் said...

//சந்தனமுல்லை said...
ஆயில்யன் said...
//எனக்கும் ஞாபகம் வந்திருச்சு :)//

ம்ம்..அப்படியேதான்..இன்னும் கொஞ்சம் யோசிச்சி என்னென்ன பண்ணீங்கன்னு சொல்லுங்க பார்க்கலாம்!!
///

ம்ம்!

இப்பத்தான் ஊருக்கு போகலாம்ன்னு பிளான் போட்டுக்கிட்டு இருக்கேன்!

நான் எதாவது ஜொள்ளப்போயி அப்புறம் எனக்கு அது ஆப்பு ஆயிடும்

ஸோ இப்போதைக்கு ஆப்!

ராமலக்ஷ்மி said...

உங்கள் மார்கழி நினைவுகள் எங்களுக்கும் மலர வைத்தது நினைவுகளை. எங்க ஊரில் கழிந்த அந்த மார்கழிகள் போல வருமா இந்த சிட்டி வாழ்க்கையில்?

அமித்துப் பாப்பாவோடு பாசுரம் பாட வாழ்த்துக்கள்:)!

அமிர்தவர்ஷினி அம்மா said...

நன்றி முல்லை

நன்றி பழமைபேசி, இப்பவும் போறிங்களா.

நன்றி வ.பூச்சியார் உங்களின் முதல் வரவுக்கும், நல்ல தரிசனம் பெற வாழ்த்துக்கள்

அப்படியா ஜமால், ஆச்ச்ர்யமா இருக்கே

அமிர்தவர்ஷினி அம்மா said...

வாங்க ஜீவன்,
நைஸா என்னை அய்யப்பன் கிட்ட மாட்டிவுட்டுட்டு நீங்க எங்கப்போறீங்க.
நல்ல கதையா இருக்கே,

ஆமா ஜமால், ஆனா தூங்க முடியலிய்யே என்ன பண்றது.

அமிர்தவர்ஷினி அம்மா said...

என்ன ஆயில்ஸ் அண்ணா நீங்களும் கொசுவத்தி சுத்தறீங்களா.

நன்றி ராகவ் முதல் வருகைக்கும், தகவலுக்கும்

சரி ரம்யா, பட்டம் கொடுத்துடறேன்.
அதான் கடையில 2,3 ரூபாக்கெல்லாம் கெடைக்குதே.

ஜீவனுக்கு தங்கமணியில்ல, சிங்கமணியாக்கும்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

நன்றி தீஷீ அம்மா, அப்படியா, இப்படி கூட விரதமா,

நன்றி வணங்காமுடி

நன்றி அமுதா, வர்றேன் வர்றேன் தோ வந்துட்டே இருக்கேன், எப்ப வருவேன், எப்படி வருவேன்னு சொல்ல முடியாது, ஆனா வரவேண்டிய நேரத்துல கரெக்ட்டா வருவேன்.

நன்றி தோழி

நன்றி சங்கரராம்

அமிர்தவர்ஷினி அம்மா said...

நீங்க சொல்றா மாதிரியே செஞ்சிடரறேன் ஜமால்

வாங்க துளசி மேடம், வருகை நன்றி,
அதானே தங்க காசா முக்கியம், நினைவுகள் நினைவுகள் அதானே பொக்கிஷம்.

என்னது, வித்யா, உங்களுக்கு ஏழு புள்ளி கோலம் தெரியுமா, ச்சே பெரிய ஆளுப்பா நீங்க்ள்ளாம்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஆஹா, கலாய்க்கறாங்களாம்ம, ஆயில்ஸ் அண்ணா உங்கள.
வாங்க பாஸ், வாங்க பாஸ்

நன்றி ராம் மேடம், பாசுரம் பாடிட்டேன் அமித்துவோட இன்னைக்கு.

Poornima Saravana kumar said...

//ச்சே. இதெல்லாம் தானா வரணும். ஆனா நமக்கு அஞ்சு புள்ளி தாண்டாது. சிக்கு கோலம் சுத்தமா போட வராது.
//

நன்றாக ரசித்துச் சிரித்தேன்
:)

Poornima Saravana kumar said...

//தூக்கம்: எழுப்ப எழுப்ப இழுத்து போத்திட்டு தூங்க வைக்கும். அப்படி ஒரு தூக்கம் கண்ணை பிடுங்கும் காலம் இது,//

இந்த காலத்தில் மட்டும் அல்ல, நான் எப்பவுமே இப்படி தான்:)

ரிதன்யா said...

//ஆமா இந்த தடவை பாசுரம் படிக்கும்போது அமித்து என்னோட இருப்பா இல்ல. ஆண்டாளுக்கு பாசுரம் சொல்ல இன்னொரு ஆள் ரெடியாகிட்டிருக்காங்கல்ல.
அமித்துவுக்கும் ஆண்டாள் பிடிக்காமலா போயிடும்.//

பிடிக்க வச்சிடுவமில்ல...

gils said...

enkau margazhina margazhi poovay song frm may madham thaan nyabgam varum..may masathula margazhi poo!!! :D ena oru contradiction :D

குடுகுடுப்பை said...

எனக்கும் தூக்கம்தான் ஞாபகம் வருது, ஆனா மார்கழில கொஞ்சம் அதிகம் அவளோதான் வித்தியாசம்

Jeevan said...

I agree on margazi, which is my most favorite month too. I am oppose, thus I like waking early on these days, to feel nature at its best in climate.

I always urge my mom to draw big colorful kolem on this season, and it adds beautify to the dawn. loved your writing, and it gives me familiar mood! :)