27 February 2009

ஒப்புக்கு அழு

தூக்கு போட்டு செத்த
நாகராஜன் அண்ணா
சாவுக்கு அழவேயில்லை
ஜானகி அக்கா
மனைவியாக இருந்தபோதும்

தம் அப்பா செத்ததற்கு
அழவேயில்லை
ராணியும், ராஜேஸ்வரி அக்காவும்

எதிர்வீட்டு பெண்ணின்
அம்மா மஞ்சள் காமலையில்
செத்த போது
அந்தச் சின்னப்பெண்ணின்
அழுகையே அன்று முழுவதும்
பேச்சாக இருந்தது.
பிணத்துடன் மாலை மாற்றிக்கொண்ட
போதுமட்டும் கடைவிழி நீர் உகுத்த
கணவனை
வசைபாடித் தீர்த்தனர் பெண்கள்

அத்தை சொன்னாள்
செத்துப்போனது
அம்மா, அப்பாவாக
இருந்தால்
இடுகாடு எடுத்துபோகும்போது
தரையில் உருண்டு
அழவேண்டுமாம்
பொறந்த பெண்கள்
அந்தக் கஷ்டத்தை கூட
எனக்கு கொடுக்கவில்லை
என் அப்பா

செத்தபின் அழவும்
அளவுகோல் உண்டு

யார் எப்படி அழுகிறார்கள்
என்ன சொல்லி அழுகிறார்கள்
என்ற ஒப்பீடு
சாவு வீட்டில் பின்னர் பேசப்படும்

வந்தா, ஒக்காந்தா
ஒப்புக்கு அழுதா
அப்படின்னு

இத்தனையும் கேட்ட, பார்த்த
பிறகு வந்த
சாவுத்தகவலுக்கு
பஸ்ஸுல போகும்போதே
ஒத்திகை பாத்தாச்சு
அங்க போய்
என்ன சொல்லி
அழணுமுன்னு.
எப்படி கதறுனுமுன்னு.

ஆகக்கூடி
அழுகை
ஆறுதலுக்கு இல்ல
ஒப்புக்குத்தான்.

22 comments:

நட்புடன் ஜமால் said...

\\ஆகக்கூடி
அழுகை
ஆறுதலுக்கு இல்ல
ஒப்புக்குத்தான். \\

நல்ல முறையில் சொல்லியிருக்கீங்க

நட்புடன் ஜமால் said...

ஒப்புக்காக அழுபவர் மத்தியில்
உண்மை அழுகையும்

மழையில் அழுபவனின் கண்ணீர் போல

நட்புடன் ஜமால் said...

அந்தக் கஷ்டத்தை கூட
எனக்கு கொடுக்கவில்லை
என் அப்பா

:(

சந்தனமுல்லை said...

//ஆகக்கூடி
அழுகை
ஆறுதலுக்கு இல்ல
ஒப்புக்குத்தான்//

:-)

Vidhya Chandrasekaran said...

நச்:(

தமிழ் அமுதன் said...

///இத்தனையும் கேட்ட, பார்த்த
பிறகு வந்த
சாவுத்தகவலுக்கு
பஸ்ஸுல போகும்போதே
ஒத்திகை பாத்தாச்சு
அங்க போய்
என்ன சொல்லி
அழணுமுன்னு.
எப்படி கதறுனுமுன்னு.///

ஒஹோ இதான் மேட்டரா?

எங்க ஊருபக்கம் இப்படித்தான் சாவு வீடு வரை நல்லா சிரிச்சு பேசிக்கிட்டுதான் வருவாங்க. கிட்டக்க வந்தோன என்னமோ ட்ரில் மாஸ்டர் சொல்லி கொடுத்த மாதிரி
சுத்தி நின்னு நெஞ்சுல அடிச்சுகிட்டு அழ (?) வேண்டியது, வராத மூக்கு சளிய மல்லுகட்டி சிந்தி நல்லா சுத்தமா இருக்குற சுவத்துல தடவிட்டு,அந்தாண்ட போய்
அங்கமாக்கா பொண்ணு புருசன்கூட வாழமாட்டேன்னு சொல்லிடுசாமுல்லன்னு,
ஊர்கதை பேச வேண்டியது.

கார்க்கிபவா said...

/இத்தனையும் கேட்ட, பார்த்த
பிறகு வந்த
சாவுத்தகவலுக்கு
பஸ்ஸுல போகும்போதே
ஒத்திகை பாத்தாச்சு
அங்க போய்
என்ன சொல்லி
அழணுமுன்னு.
எப்படி கதறுனுமுன்//

:(((((

narsim said...

நல்லா இருந்துச்சு மேடம்.. ஒப்புக்கு சொல்லல.. நிஜமாகவே நல்ல வார்த்தைகள்!

புதியவன் said...

கவிதை முழுதும் யதார்த்தமான வரிகள் அருமை...

அ.மு.செய்யது said...

//எங்க ஊருபக்கம் இப்படித்தான் சாவு வீடு வரை நல்லா சிரிச்சு பேசிக்கிட்டுதான் வருவாங்க. கிட்டக்க வந்தோன என்னமோ ட்ரில் மாஸ்டர் சொல்லி கொடுத்த மாதிரி
சுத்தி நின்னு நெஞ்சுல அடிச்சுகிட்டு அழ (?) வேண்டியது, வராத மூக்கு சளிய மல்லுகட்டி சிந்தி நல்லா சுத்தமா இருக்குற சுவத்துல தடவிட்டு,அந்தாண்ட போய்
அங்கமாக்கா பொண்ணு புருசன்கூட வாழமாட்டேன்னு சொல்லிடுசாமுல்லன்னு,
ஊர்கதை பேச வேண்டியது.///

:))

Poornima Saravana kumar said...

// ஜீவன் said...


எங்க ஊருபக்கம் இப்படித்தான் சாவு வீடு வரை நல்லா சிரிச்சு பேசிக்கிட்டுதான் வருவாங்க. கிட்டக்க வந்தோன என்னமோ ட்ரில் மாஸ்டர் சொல்லி கொடுத்த மாதிரி
சுத்தி நின்னு நெஞ்சுல அடிச்சுகிட்டு அழ (?) வேண்டியது, வராத மூக்கு சளிய மல்லுகட்டி சிந்தி நல்லா சுத்தமா இருக்குற சுவத்துல தடவிட்டு,அந்தாண்ட போய்
அங்கமாக்கா பொண்ணு புருசன்கூட வாழமாட்டேன்னு சொல்லிடுசாமுல்லன்னு,
ஊர்கதை பேச வேண்டியது
//

அண்ணா எங்க ஊர் பக்கமும் இப்படி தான்:(

Poornima Saravana kumar said...

//ஆகக்கூடி
அழுகை
ஆறுதலுக்கு இல்ல
ஒப்புக்குத்தான். //

சில பேர் நம்ம வீட்டு பெருசு போன போது வந்திருக்கு அதனால நாமளும் போகனும்னு சொல்லிட்டு சாவு வீட்டு போவதை பார்திருக்கேன்..

அமுதா said...

/*ஆகக்கூடி
அழுகை
ஆறுதலுக்கு இல்ல
ஒப்புக்குத்தான்*/
:-((

Karthik said...

Really Nice.

தாரணி பிரியா said...

//ஆகக்கூடி
அழுகை
ஆறுதலுக்கு இல்ல
ஒப்புக்குத்தான்.//

:( இப்ப எல்லாம் எல்லா உறவுமே இப்படிதான் ஆகி போச்சுங்க‌

அப்துல்மாலிக் said...

//ஆகக்கூடி
அழுகை
ஆறுதலுக்கு இல்ல
ஒப்புக்குத்தான்.
//

ம்ம் சரியா சொன்னீங்க.. இதை கண்கூடாக பார்த்து இருக்கென்

என்ன செய்வது அன்பு இல்லியே எல்லாமே போலிதான்

SK said...

ம்ம்ம்ம்

தமிழ் said...

/செத்தபின் அழவும்
அளவுகோல் உண்டு

யார் எப்படி அழுகிறார்கள்
என்ன சொல்லி அழுகிறார்கள்
என்ற ஒப்பீடு
சாவு வீட்டில் பின்னர் பேசப்படும்/

உண்மை தான்

Maddy said...

செத்தபின் அழவும்
அளவுகோல் உண்டு...............

????????

இறப்புக்கு போயிட்டு கிளம்பும்போது வரேன்னு சொல்லகூடாதுன்னு ஒரு மரபு இருக்கு!!! இது உங்க பக்கம் வழக்கதில இருக்க??

ரிதன்யா said...

வாழ்க்கையே நாடக மேடை. அதில் நாம் எல்லோரும் நடிகர்கள்.
:-)

Thamira said...

நல்ல படைப்பு.!

goma said...

இப்போழுதுதான் புரிகிறது அந்த அழுகைக்கு ஏன் ஒப்பாரி என்று பெயர் வந்ததென்று.