17 September 2009

உதவி அமைப்புகள் - தொடர்பதிவு

எப்போதும் சீரிய(ஸ்) விஷயங்களையே மேற்கொள்ளும் எஸ்.கே, இந்தமுறையும் அது போன்ற ஒரு தொடர்பதிவுக்கு அழைத்திருந்தார்.அதாகப்பட்டது கல்விக்காக கை கொடுத்து உதவும் அமைப்புகளைப் பற்றி பகிர்ந்துகொள்ள. இது ஏதாவது ஒருவருக்காகவாவது உதவும் என்ற நல்லண்ணமே அடிப்படையாக இருக்கக்கூடும்.

அதைக்குறித்து துழாவியதில் அகப்பட்டது, திரு. சைதை துரைசாமி அவர்களின் மனித நேய அறக்கட்டளையின் கீழ் இயங்கிவரும் மனித நேயம் ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் இலவசபயிற்சி மையம்.

இங்கு யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனால் நடத்தப்படும் இந்திய அரசுப்பணி தேர்வுகளுக்கு இலவச வகுப்பு நடத்தப்படுகிறது. இது முன்னாள் ஐ.ஏ.எஸ் & ஐ.பி.எஸ் அதிகாரிகளின் சிறப்பு மேற்கவனத்தாலும் அவர்களால் பயிற்சி வகுப்பும் நடக்கிறது.

இந்திய அரசுப்பணி தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் அதற்கான வழிமுறைகளை அறிந்து கொள்ளவும், அதற்கான பயிற்சியில் ஈடுபடவும் சிறப்பான பயிற்சிகள் தரப்படுகிறது. வெளியூர் மாணவர்களுக்கு தங்குமிடம், உணவு இலவசமாய் அளிக்கப்படுகிறது. இலவச இணைய தளப் பயிற்சியும் உண்டு

இந்த மையத்திலிருந்து இந்த முறை 25 மாணாக்கர்கள் தேர்வு செய்யப்பட்டதாக நாளிதழ் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

தொடர்புக்கு:
Manidha Naeyam IAS & IPS Free Coaching Centre
#28, 1st Main Road, C I T Nagar, Chennai – 600 035
Course Director : +91-994070110
Help line - 9025408908 / 9840106162
044 – 24358373 / 24330095
http://www.saidaiduraisamysmanidhaneyam.com/

இந்தத் தொடர்பதிவை தொடர அழைப்பது : கண்ணாடி ஜீவன்

மேலும் இது போன்ற உதவி அமைப்புகள் பற்றி தெரிந்தால் ஏணிப்படிகள் பதிவில் இணைக்கிறேன் எஸ்.கே. நன்றி அழைப்பிற்கு

11 comments:

SK said...

நன்றி அமித்து அம்மா..

Vidhoosh said...

நல்லதொரு பகிர்வு. :)

-வித்யா

pudugaithendral said...

அருமையான தொடர் பதிவு

அமுதா said...

நல்ல பகிர்வு... நல்ல தொடர் பதிவு

அ.மு.செய்யது said...

TNPSC,UPSC இரண்டு வகையான தேர்வுகளுக்குமே பயிற்சி வகுப்புகள் நடத்த படுகின்றனவா ??

நல்ல முயற்சி !!! பகிர்வுக்கு நன்றி !!

குடந்தை அன்புமணி said...

தொடர் இடுகைகளிலேயே
உருப்படியான பயனுள்ள இடுகை இதுவாகத்தான் இருக்கும். ஆரம்பித்து வைத்த எஸ்.கே. அவர்களுக்கும், தொடர்ந்த தங்களுக்கும், தொடரப்போகும் ஜீவனுக்கும் வாழ்த்துகள்.

நட்புடன் ஜமால் said...

நல்ல விடயம்.

நல்ல பகிர்தல்.

Karthik said...

வலையுலக வரலாற்றில் முதல் முறையா ஒரு யூஸ்ஃபுல் தொடர்பதிவா? நன்றி. :)

தமிழ் அமுதன் said...

நல்ல பதிவு ..! நன்றி ! விரைவில் பதிவிடுகிறேன்...........!!!!

ப்ரியமுடன் வசந்த் said...

நல்ல உதவி..

"உழவன்" "Uzhavan" said...

தகவலுக்கு நன்றி