10 October 2008

பொருள் வழிப் பிரிவு



எட்டி எட்டி வரும்
உன் சிங்கார சிறு கையை
விலக்கிவிட்டு
கன்னத்தில் சின்னக் கிள்ளல்
வைத்துக்கொண்டே
அம்மா
ச்சாயங்காலம் சீக்கிரம்
ஆபிச் லந்து வந்துடுவேன் டா
அம்மாவுக்கு
நாளைக்கு லீவுடா
உன்கூடவே இருப்பேன்டா
என்று சொல்லி
அலுவலகத்துக்கு புறப்படும்
என்னை
கழுத்து வளைத்து பார்க்கிறாய்
ஆயாவின் இடுப்பில் அமர்ந்துகொண்டே
கையை அசைத்து டாட்டா சொல்கிறாய்
தாத்தா சொல்லிக்கொடுத்தாற் போலவே
புருவம் சுருக்கி,
கண்கள் இடுக்கி
இதழ்கள் மலர
சிரித்துகொண்டிருக்கிறாய்
.

ஆனால்
உன் புருவம் சுருக்குதல்
சொல்லிவிட்டது
மகளே
இவள் எங்கே போகிறாள் என்று நீ நினைப்பதை.
ஆனாலும் எனக்கு
புரியவில்லை
உன் சிரிப்பு
நான் சொல்லியது
புரிந்தா நீ சிரித்திருப்பாய்.
ரயில் பிடிக்கும்
அவசரத்தில்
அப்போது மறந்தாலும்
ஆபிஸில் வந்து
அழுது கொண்டே
நினைத்துக்கொள்கிறேன்
உன் சிரிப்பை

15 comments:

சந்தனமுல்லை said...

am completely with you..இதை நான் நன்றாகவே உண்ர்ந்திருக்கிறேன்.....ம்ம்..உணர்வுகளை நன்றாக பிரதிபலித்திருக்கிறீர்கள்!!

ஆயில்யன் said...

//ரயில் பிடிக்கும்
அவசரத்தில்
அப்போது மறந்தாலும்

ஆபிஸில் வந்து
அழுது கொண்டே
நினைத்துக்கொள்கிறேன்
உன் சிரிப்பை//


மனம் கலங்க செய்கிறது :(

தமிழ் அமுதன் said...

கலக்கலா ஆரம்பிச்சு கடைசில கலங்கடிசுட்டிங்க!

MSK / Saravana said...

ரொம்ப டச்சிங்கா இருக்கு.. நல்லா எழுதி இருக்கீங்க..

MSK / Saravana said...

தலைப்பு நல்லா இருக்கு.. பொருத்தமா இருக்கு..

குடுகுடுப்பை said...

ஆமாங்க என்னதான் இருந்தாலும் குழந்தை மேல் அம்மாவின் பாசம்தான்
அளவிட முடியாதது

ஜியா said...

:(( உணர்வை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்

புதுகை.அப்துல்லா said...

அட நான் கூட பொருள் வழிப்பிரிவில்தான் ஓரு கவிதை போஸ்ட் பண்ணி இருக்கேன். மறுபடியும் வைஸ் பீப்பிள் கதயா?? :)))))))))

புதுகை.அப்துல்லா said...

ஆனா உங்க கவிதை டச்சிங்

அமிர்தவர்ஷினி அம்மா said...

நன்றி Mullai

நன்றி aayilyan

நன்றி Jeevan

நன்றி SKMSK

நன்றி குடுகுடுப்பை

நன்றி புதுகை அண்ணா

அமுதா said...

/*
ஆபிஸில் வந்து
அழுது கொண்டே
நினைத்துக்கொள்கிறேன்
உன் சிரிப்பை
*/

அழகாகக் கூறியுள்ளீர்கள், உள்ள உணர்வுகளை...

Princess said...

ரொம்ப! ரொம்ப! உண்மையான,.. யதார்த்தாமான,.. வரிகள்
கலக்கிட்டீங்க போங்க!

Princess said...

"பொருள் வழிப் பிரிவு" - Super thalaippu!!!

Arasi Raj said...

Migavum arumai..ennoda current situation solluthu unga kavithai...nanum kan kalangitten....ithe topic-la "porul valin pirinthu" nanum kavithai eluthirukken..mudinja padinga

cheena (சீனா) said...

அழகுக் கவிதை - பணிக்குச் செல்லும் இளம் தாய்மார்களின் இன்றைய இயல்பு நிலை. என்ன செய்வது. மழலைகளின் எதிர்கால நல்வாழ்விற்குத்தானே !

பிரிவின் பின் மாலையில் சந்திக்கும் போது இன்பம் இரட்டிப்பாகும்