27 August 2008

இப்படிக்கு காதல்


உன்னை நானும்

என்னை நீயும்

நன்றாக புரிந்துகொண்டோம்

திருமணத்திற்குபிறகு

கண் கெட்ட பிறகு

திசை நோக்கி நமஸ்காரம்

செய்யலாம்

ஆனால்

நாம்

சூரியனையே விழுங்கி விட்டு

அகப்படும்போதெல்லாம்

அனல் கக்கும்

பறவைகளானோம்

அனல் தணிய

மழை பெய்யக்கூடும்.

அதுவரை

ஒடியாதிருக்கட்டும்

நம் சிறகுகள்

இப்படிக்கு காதல்

10 comments:

Unknown said...

வாவ் சூப்பர் அம்மா..!! :)) juz now saw u rly..!! :))

அமிர்தவர்ஷினி அம்மா said...

Thanks Srimaa

சொல்லிக்கிற மாதிரி கொஞ்சம் கவிதை எழுதுவேன்
கல்யாணத்திற்கு முன்.

காதல் கணவரையே கரம் பிடித்தால்
கவிதை எழுதுவதில்லை கல்யாணதிற்கு பின்.

மழலையின் வரவிற்கு பின்னர்
மீண்டும் புதுப்பிக்க ஆரம்பித்திருக்கிறேன்
என்னை நான்.

அதன் பிள்ளையார் சுழிதான்
மேற்கூறியது.

Unknown said...

வாவ் உங்க பதிலே ஒரு கவிதையா இருக்கே..!! :)) கலக்கறீங்க... வாழ்த்துகள்..!! :))) அப்பறம் உங்களுக்கு என்னைவிட ஒரு ரெண்டு, மூணு வயசுதான் அதிகமிருக்கும்.. ஆனா நான் உங்கள அம்மா-ன்னு சொல்றதுல உங்களுக்கு ஏதாவது அப்ஜெக்ஷன் இருக்கா?? இருந்தா சொல்லிடுங்க..!! :)) நான் உங்க ப்ளாக் நேம்ல இருக்கற அமிர்தவர்ஷினிய கட் பண்ணிட்டு அந்த அம்மாவ மட்டும் எடுத்துக்கிட்டேன் ஹி ஹி ஹி..!! :))

அமிர்தவர்ஷினி அம்மா said...

அம்மா என்று கூப்பிடுவதில் ஆட்சேபனை ஏதும் இல்லை. ஆனால் அமித்துவை கட் பண்ணாதேப்பா.

MSK / Saravana said...

//அதுவரை
ஒடியாதிருக்கட்டும்
நம் சிறகுகள்//

கலக்கல்.. :))))

அமிர்தவர்ஷினி அம்மா said...

Thanks for yr visit saravanan

Unknown said...

அடடா செண்டிமெண்ட்...!! ;)) ஓகே அஅம்மான்னு கூப்பிடறேன்.. அ பார் அமிர்தவர்ஷினி.. அம்மா நீங்க.. ஓகேவா?? ;))))

சந்தனமுல்லை said...

:-))...நல்ல கவிதை..வாழ்க்கையை கவிதையாக்கும் திறமை வாய்க்கப் பெற்றிருக்கிறீர்கள்!!

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஸ்ரீமா ரைட் ரைட்

நன்றி முல்லை (அனுபவங்கள் தானே வாழ்க்கையை நடத்துகிறது)

cheena (சீனா) said...

பொதுவாக காதலர்கள் கவிதை எழுதுவதும் ( சோகக் கவிதை ? ) - கவிஞர்கள் காதல் செய்வதும் இயல்பு. கவிதை நன்றாக இருக்கிறது. நல்வாழ்த்துகள்.