11 February 2010

முட்டுசந்துக்கொரு பிள்ளையார் கோயில்

சரியாய் இந்தப் பருவத்தில், வீடு மாறி போகும் போதே அம்மாவின் எச்சரிக்கை தொடங்கிவிட்டது. இதப்பாரு அங்க கஜ கஜன்னு ஆம்பளப் பசங்களும், பொம்பளப் பசங்களும் நிறைய. யார்கிட்டயும் அனாவசியமா பேச்சு வெச்சுக்கக்கூடாது. என்னன்னா என்னன்னு இருக்கனும். அம்மா என்னிடம் அடிக்கடி சொல்லுவது இது. வாரிப்பூசிக்கொண்டு குத்துதே, கொடையுதே என்று அவஸ்தை படுவதற்கு இப்படி இருப்பதே மேல் என்று அடிக்கடி சொல்வார்கள்.

நமக்கு தமிழ்ல / இங்கிலீஷ்ல பிடிக்காத வார்த்தைதான் அட்வைஸ் ஆச்சே. அதனால இதையெல்லாம் நான் பின்பற்றமாட்டேன் என்பது அவர்களுக்கு நன்றாக தெரியுமாதலால்,கூடவே அங்க இருக்குற எல்லா ஆம்பளப் பசங்களையும் அண்ணா ந்னு தான் கூப்பிடனும் என்பதுதான் கட்டளை. தப்பித்தவறிக் கூட அவர்களோடு நானோ, என்னோடு அவர்களோ பேசக்கூடாது. மீறினால் வசவு விழுவும். எனக்கல்ல, அவர்களுக்கு.

அந்த வீட்டில் இருந்த நிறைய அண்ணாக்கள் சென்னை கார்ப்ஸில் (மாநகராட்சி பள்ளி) தான் படித்தார்கள். அதனால் எல்லோரும் ஒன்று கூடி சாயங்காலம் ட்யூஷன் மாதிரி எடுப்பார்கள். பெரிய அண்ணாக்கள் எடுக்க, அக்காக்கள், தங்கைகள், தம்பிகள் என நிறைய பேர் உட்கார்ந்திருப்பார்கள்.
எனக்கும் அந்த கூட்டணியில் ஐக்கியமாக ஆசை. அம்மாவிடம் சொன்னால் எல்லாம் இங்க உக்காந்து படிச்சு மார்க்கு வாங்குனா போதும், அங்க போய் ஒன்னும் ஆகத்தேவையில்ல, அதுங்க இருக்கறதையும் கெடுத்துடும் என்று சொல்லக்கேட்டதால், ஒரு நாள் அம்மா எங்கேயோ சென்றிருக்கும் போது, நோட்டு புக் சகிதம் அங்கே போய் உட்கார்ந்து கொண்டேன்.

ஒரு அண்ணா செங்கல் சுவற்றில் சாக்பீஸால் ஒளவையார் என்று எழுதிவிட்டு எங்க, எல்லாரும் சொல்லுங்க ஒல வைய்யார் என்றார். உட்கார்ந்திருப்பதெல்லாம் ரிப்பீட்ட ஆரம்பிக்க, நான் மட்டும் அண்ணா, அது ஒல வைய்யார் இல்ல ணா, ஒளவையார் ணா என்று சொல்ல, டேய் இத யாருடா இங்க சேர்த்தது, தலையில கொட்டி அனுப்பிவிடுங்கடா, அவுங்க அம்மா பாத்தா நம்பள கத்தும் என்று சொல்லி தன் தமிழ் மானத்தை காற்றில் விடாமல் காப்பாற்றிக்கொண்டார்.

அதனால் வீட்டருகில் செட்டு சேரும் வாய்ப்பே இல்லை. வாய்க்க அம்மாவும் விடவில்லை. ஆனால் அரசல் புரசலாக அவ்வப்போது இன்னார் இன்னாரைப் பார்க்கிறார்கள், பின்னாடியே போகிறார்கள், கல்யாணம் செய்துகொள்ளப்போகிறார்கள் இல்லையெனில் ஓடிப்போய்விட்டார்கள் என காதில் விழும். நிறைய அண்ணாக்கள் அதே அக்காக்களை கல்யாணம் செய்து கொண்டார்கள். சில அக்காக்கள் வேறு அண்ணாக்களை. சிலர் சேரவேயில்லை. ஒரு அக்காவும், அண்ணாவும் மாத்திரம் வெவ்வேறு ஆளை கல்யாணம் செய்து கொண்டு பிறகும் காதலித்துக் ! கொண்டிருந்தார்கள். திகட்ட திகட்ட நிறைய கதைகளை கேட்டதாலோ என்னமோ காதல் மேல் ஒரு புனித அபிப்ராயமே இல்லை, பாரி-நிர்மலா ஜோடியில் பாரி அண்ணா இறக்கும் வரை / செங்குட்டுவன் - லதா ஜோடி ஓடிப்போய் கல்யாணம் செய்தாலும் லட்சியத்தம்பதியாய் வளைய வந்ததை கண்டதைத் தவிர.

ஞாயிற்றுக்கிழமைகளில் ஜீன்ஸும், பனியனும் மாட்டிக்கொண்டு நடையாய் நடப்பார்கள். சைக்கிளை கடன் வாங்கி, ஃப்ரண்டின் பைக்கை கடன்வாங்கி என கண்கட்டி வித்தை நடக்காத குறைதான். அக்காக்களும் அதற்கீடாக தலை நிறைய பூவோடு தாவணிகளில் வலம் வருவார்கள். பார்க்க கண் கொள்ளா காட்சியாகத் தான் இருக்கும். ஆனால் அன்றைய ஞாயிற்றுக்கிழமை இரவில் கண்டிப்பாய் சம்பந்தப்பட்டவர்கள் வீடுகளில் சண்டை தூள் பறக்கும். ஞாயிறுகளில் தூர்தர்ஷன் ஒளிபரப்பும் படத்தை மிஸ் செய்தாலும், இந்த சண்டைகளை மிஸ் செய்யக்கூடாது. அவ்வளவு(ம்) சுவாரஸ்யம்.

மொசப்புடிக்கிற நாயை மூஞ்சைப் பார்த்தால் தெரியும் என்பதைப் போல வகுப்புத்தோழிகள் சிலரின் போக்கே அவர்களை காட்டிக்கொடுத்துவிடும் என்பதால் அந்தப் பக்கமும் அவ்வளவாய் தலை சாய்வதில்லை. அய்யோ, எனக்கு இதெல்லாம் தெரியாதுப்பா என்கிற சாமியார் மாதிரியான ஆளுமில்லை, பொதுவாகவே ஒரு ரெண்டுங்கெட்டான். அதென்னமோ எனக்கொரு ராசி. தூது செல்ல ஒரு தோழி இல்லையென துயர் கொண்டாயோ தலைவி? என்று கேட்டுக்கொண்டு நான் தான் இருவருக்குமிடையே காதல் பரிவர்த்தனைகள் நடத்தி வைப்பதாக நினைத்துக்கொண்டு சில தோழிமார்களின் அம்மாக்கள், வாம்மா என்பதை விடவும் வந்துட்டியா என்று ஒரு பார்வை பார்ப்பார்கள். எனது பூஞ்சான் தோற்றமும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.

சம்பந்தவட்டவள் எங்கு போனாலும் என்னை அழைத்துதான் குறுக்கு விசாரணை நடக்கும். சுதாவின் அம்மாவும், கிருஷ்ணாவின் அப்பாவும், துர்கா, தீபாவின் அம்மாக்கள் கூட விதிவிலக்கல்ல. இதில் துர்கா, பள்ளி, ட்யூஷன் முடித்து எங்களோடுதான் வந்துகொண்டிருப்பாள். திடீரென்று பார்த்தால் அந்த உருவம் மறைந்திருக்கும். சரியாக கவனித்தால் இடையில் ஏதாவது ஒரு சந்துக்குள் நுழைந்திருப்பாள். இவ பண்றதுக்கெல்லாம் நாம தாண்டி மாட்டறோம் என்றபடியே அவளோடு சேரவும் முடியாமல், சேராமல் இருக்கவும் முடியாமல் அது ஒரு அவஸ்தை.

பெரும்பாலும் அய்னவன் வய்னந்தாண்டி, இட்லவ ஏன் அட்லன்னிக்கு லீய்னவு தெய்னறியுமா? என்பது போன்ற பாஷைகளை உடனிருக்கும் தோழிகள் பேசும்போது, ஏய் என்னப்பா, என்னப்பா பேசுறீங்க என்று நச்சரித்து, இது ஒன்னுடி என்று பாட்டுவாங்குவேன்.

நம்ம ஊர்ல எந்த சாமிக்கு கோவில் இருக்கோ, இல்லையோ பிள்ளையாருக்கு மட்டும் ஒவ்வொரு சந்து முக்குலயும் கோவில் இருக்கும். மத்த நாள் கிழமைகளில் சீந்துவார் இல்லாம இருந்தாலும் செப்டம்பரில் வரும் பிள்ளையார் சதுர்த்திக்கு மாத்திரம் பிள்ளையார்(பட்டி) ஹீரோவாகிவிடுவார்.
அந்த மாதிரிதான் எது இருக்குதோ இல்லையோ நம்ம பய புள்ளைகளுக்கு டீனேஜ்ல களுக்குன்னா காதல் வந்துடும். இது இப்ப வரைக்கும் விடாம தான் தொடருது போல. (பின்ன உலகம் உள்ளளவுக்கும் உள்ள விஷயமாச்சே) எ.காக்களுக்கு எங்கேயுமே போகவேண்டாம். நிறைய லைவ் ப்ரோக்ராமில் நான் பன்னிரண்டாவது படிக்கிறேங்க, என் ஆளு பத்தாவது படிக்குதுங்க என்ற ரேஞ்சில் ஆரம்பித்து, இந்தப் பாட்டை என் ப்ரண்டுக்கெல்லாம் டெடிகேசன் செய்றேங்க என்று உச்சிமண்டையில் சுர்..... ருங்க வைக்கிறார்கள்.

தொண்ணூறுகளில் உடன் படித்தவர்களில் நிறைய பேர் காதல் கத்தரிக்காயை கிண்டி குழம்பு வைத்து சாப்பிட்டாலும், நாம அந்தளவுக்கு வொர்த் இல்லாத காரணத்தினால், டென்சிங்க் பால்டன், விமலா, கலைச்செல்வி, பிருந்தா, போன்ற உருப்படி(யானவர்)கள் அதெல்லாம் ஒரு பேண்டஸி, நாம இப்போ படிக்கறதுல மட்டும்தான் கான்செண்ட்ரேட் செய்யனும், நீ அவங்களோட சேர்ந்து ஒன் கேரியர வேஸ்ட் பண்ணிக்காத என்று கூப்பிட்டு க்ரூப் ஸ்டடியில் சேர்த்துக்கொண்டதால் பிஸிக்ஸில் மூன்று மார்க்கை கோட்டை விட்டதோடு நிறுத்தி மீண்டும் ஒரு உத்வேகத்தில் படிப்பைத் தொடர்ந்தேன், தொடர்கிறேன்.

ஆனால் பிற்பாடு நானும் முயலைப் பிடிப்பேன் என்பதை அப்போது அறிந்திருக்கவில்லை:) முயலைப் பிடிச்சு, சின்னப்புறாவும் வந்தாச்சு ;)

குறிப்பு: தொடர்பதிவிட அழைத்த சின்ன அம்மிணிக்கு நன்றிகள் (சொல்லிக்கொடுத்தா மாதிரியே எழுதிட்டேனா ;)))))))))

ஜமால் சகோ, ஜீவன், அமுதா, கார்த்திகா வாசுதேவன் – விருப்பமிருந்தால் தொடருங்கள்.

33 comments:

நட்புடன் ஜமால் said...

tamil installittu vaaren - commenta

நட்புடன் ஜமால் said...

சென்னை கார்ப்ஸில்

[[நிறைய அண்ணாக்கள் அதே அக்காக்களை கல்யாணம் செய்து கொண்டார்கள். சில அக்காக்கள் வேறு அண்ணாக்களை. சிலர் சேரவேயில்லை]]

அய்யோ, எனக்கு இதெல்லாம் தெரியாதுப்பா என்கிற சாமியார் மாதிரியான ஆளுமில்லை,]]

------------------
அவ்வளவு(ம்) சுவாரஸ்யம்.
பதிவு(ம்)

ப்ரியமுடன் வசந்த் said...

அட நல்ல டீன் ஏஜ் லைஃப் ஐ மிஸ் பண்ணியிருக்கீங்க...

☀நான் ஆதவன்☀ said...

:))))

பாஸ் நானும் சென்.காப்ஸ் ஸ்கூல் தான் :)

இட்லந்த பட்லதிவு கட்லலக்கல் பாட்லஸ் :))

Unknown said...

//ஆனால் பிற்பாடு நானும் முயலைப் பிடிப்பேன் என்பதை அப்போது அறிந்திருக்கவில்லை:) முயலைப் பிடிச்சு, சின்னப்புறாவும் வந்தாச்சு ;)
//

விதி வலிதுன்னு சும்மாவா சொன்னாங்க :-)

அமிர்தவர்ஷினி அம்மா said...

KVR said...
//ஆனால் பிற்பாடு நானும் முயலைப் பிடிப்பேன் என்பதை அப்போது அறிந்திருக்கவில்லை:) முயலைப் பிடிச்சு, சின்னப்புறாவும் வந்தாச்சு ;)
//

விதி வலிதுன்னு சும்மாவா சொன்னாங்க :-)

யாருக்கு கே.வி.ஆர் சார் ;)))))))

பின்னோக்கி said...

6 வது பத்தி அருமை :)

அது என்னவோ தெரியலை, இந்த தொடரை எழுதும் எல்லாரும் காதலுக்கு தூது போன ரேஞ்சிலேயே இருக்கிறார்கள்.

இனி எழுதுபவர்கள், அவர்களின் டைரியின் ஜெராக்ஸ்யும் பதிவில் சேர்க்கவேண்டும் :)

அகநாழிகை said...

நல்லா எழுதியிருக்கீங்க சாரதா.

அன்புடன் அருணா said...

அது சரி நீங்களுமா!!!

காமராஜ் said...

அமித்தம்மா.. நாமெல்லாம் சிறுகதை எழுதறவங்கலாச்சே.
எத எழுதறது,எத எழுதக்கூடாதுன்னு தெரியாமலா இருப்போம்.
ஆனாலும் நல்லாருக்கும்மா.

Sanjai Gandhi said...

அட.. நீங்களும் ஜோதியில ஐக்கியம் ஆய்ட்டிங்களா.. எம்புட்டு அண்ணன் உங்களுக்கு.. :)))))

Thamira said...

ஒவ்வொரு பாராவும் ரசனை.

/நான் மட்டும் அண்ணா, அது ஒல வைய்யார் இல்ல ணா, ஒளவையார் ணா என்று சொல்ல, //

/நிறைய அண்ணாக்கள் அதே அக்காக்களை கல்யாணம் செய்து கொண்டார்கள். சில அக்காக்கள் வேறு அண்ணாக்களை//

சைக்கிளை கடன் வாங்கி, ஃப்ரண்டின் பைக்கை கடன்வாங்கி என கண்கட்டி வித்தை நடக்காத குறைதான். அக்காக்களும் அதற்கீடாக தலை நிறைய பூவோடு தாவணிகளில் வலம் வருவார்கள்//

/தூது செல்ல ஒரு தோழி இல்லையென துயர் கொண்டாயோ தலைவி? என்று கேட்டுக்கொண்டு //

/திடீரென்று பார்த்தால் அந்த உருவம் மறைந்திருக்கும். சரியாக கவனித்தால் இடையில் ஏதாவது ஒரு சந்துக்கு//

காமெடியும் தூள் கிளப்புவேன்னு நிரூபிச்சுட்டீங்க.

/ஆனால் பிற்பாடு நானும் முயலைப் பிடிப்பேன் என்பதை அப்போது அறிந்திருக்கவில்லை// இந்த ஒரு வரிதான் புரியலை..

Deepa said...

கலக்கல் அமித்து அம்மா!
சிரித்துச் சிரித்து.. முடியல...
//டேய் இத யாருடா இங்க சேர்த்தது, தலையில கொட்டி அனுப்பிவிடுங்கடா, அவுங்க அம்மா பாத்தா நம்பள கத்தும் //

//சில தோழிமார்களின் அம்மாக்கள், வாம்மா என்பதை விடவும் வந்துட்டியா என்று ஒரு பார்வை பார்ப்பார்கள்.//
:)))

//முயலைப் பிடிச்சு, சின்னப்புறாவும் வந்தாச்சு ;)//
இன்னொரு குட்டிப் புறாவோ முயலோ வரப்போகுது! :)

அ.மு.செய்யது said...

/திகட்ட திகட்ட நிறைய கதைகளை கேட்டதாலோ என்னமோ காதல் மேல் ஒரு புனித அபிப்ராயமே இல்லை, //

இருந்துட்டு போவுது..அந்த கதைகள்லர்ந்து தான உங்களோட சிறுகதைகள் உருவாகுது..இப்படி பொறுப்பில்லாம பேசக்கூடாது.

Anonymous said...

//மொசப்புடிக்கிற நாயை மூஞ்சைப் பார்த்தால் தெரியும் என்பதைப் போல வகுப்புத்தோழிகள் சிலரின் போக்கே அவர்களை காட்டிக்கொடுத்துவிடும் //

ஹஹா, எங்கிருந்தாதான் புடிக்கிறீங்களோ வார்த்தைகளை. அருமையா இருக்கு

Anonymous said...

//ஆனால் பிற்பாடு நானும் முயலைப் பிடிப்பேன் என்பதை அப்போது அறிந்திருக்கவில்லை:) முயலைப் பிடிச்சு, சின்னப்புறாவும் வந்தாச்சு ;)//

அந்தக்கதையையும் கொஞ்சம் விலாவாரியா எழுதறது

மாதவராஜ் said...

ரசித்துப் படித்தேன் ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை புன்னகையோடு..

சந்தனமுல்லை said...

/ஆனால் பிற்பாடு நானும் முயலைப் பிடிப்பேன் என்பதை அப்போது அறிந்திருக்கவில்லை:) முயலைப் பிடிச்சு, சின்னப்புறாவும் வந்தாச்சு ;)/


இது மேட்டர்!! ;-)))

Karthik said...

sontha kathaiya solla sonna oor kathai ellama solreenga? ithu sellathu..:)))

"உழவன்" "Uzhavan" said...

சின்னப்புறாவும் வந்தாச்சு //
 
சின்னப் புறா என்னா பண்ணுறாங்க? சவுக்கியமா? :-)
வழக்கம் போல ரசனை அமித்துமா.

தமிழ் அமுதன் said...

நல்லா எழுதி இருக்கீங்க ..!
என்னையும் அழைத்தற்க்கு ...!நன்றி ...!

(பொய்யா எழுத கூடாது உண்மையும் சொல்ல முடியாது என்ன பண்றது...? புரியலையே )

சாந்தி மாரியப்பன் said...

அமித்தம்மா... நீங்க மொசப்புடிச்ச கதைய இப்படி ஒரே வரியில சுருக்கிட்டீங்களே.

நட்புடன் ஜமால் said...

(பொய்யா எழுத கூடாது உண்மையும் சொல்ல முடியாது என்ன பண்றது...? புரியலையே )]]

அதே அதே தான் - அண்ணா எனக்கும் அதே நிலை.

ஜெய்லானி said...

////நமக்கு தமிழ்ல / இங்கிலீஷ்ல பிடிக்காத வார்த்தைதான் அட்வைஸ் ஆச்சே///
அப்படி பட்ட வயசு ஆச்சே!!.

அம்பிகா said...

வரிக்கு வரி ரசிக்க முடிஞ்சுது.
//ஆனால் பிற்பாடு நானும் முயலைப் பிடிப்பேன் என்பதை அப்போது அறிந்திருக்கவில்லை:) முயலைப் பிடிச்சு, சின்னப்புறாவும் வந்தாச்சு ;)//
முயல் பிடித்தால் முயல் குட்டி தானே வரனும்.
ஹிஹிஹி.

அம்பிகா said...

வரிக்கு வரி ரசிக்க முடிஞ்சுது.
//ஆனால் பிற்பாடு நானும் முயலைப் பிடிப்பேன் என்பதை அப்போது அறிந்திருக்கவில்லை:) முயலைப் பிடிச்சு, சின்னப்புறாவும் வந்தாச்சு ;)//
முயல் பிடித்தால் முயல் குட்டி தானே வரனும்.
ஹிஹிஹி.

Dr.Rudhran said...

very well written. i read it twice to savour the flavor.keep writing.

Unknown said...

//யாருக்கு கே.வி.ஆர் சார் ;)))))))//

முயலுக்கு தான் :-). sun rises in the east மாதிரி இதுவும் மாறாதது. எங்கேயும் எப்பொழுதும் ;-)

ஹுஸைனம்மா said...

//ஆனால் பிற்பாடு நானும் முயலைப் பிடிப்பேன்//

அது என்ன்வோ அப்படித்தான் ஆகிவிடுகிறது, ஒரு செயலைச் செய்யக்கூடாது என்று உறுதியாக இருப்பவர்களுக்கு அதைச் செய்தே ஆக வேண்டிய கட்டாயம் வாய்க்கிறது.

அது பதின்மப் பருவத்தில் வராதவரை நலம். ;-)

அமுதா said...

இரசித்துப் படித்தேன். நன்றி என்னை அழைத்ததற்கு... கொஞ்ச நாள் ஆகும் மன்னிச்சுக்குங்க...

சுரேகா.. said...

முயலைப்பிடித்ததுதான் முத்தாய்ப்பு!
:)

சின்னப்புறாவுக்கு வாழ்த்துக்கள்!

பா.ராஜாராம் said...

ரொம்ப பிடிச்சிருக்கு அமித்தம்மா.எப்பவும் போல்.

கவிதன் said...

சுவாரஸ்யமான பதிவு .....

இந்தப் பாட்டை என் ப்ரண்டுக்கெல்லாம் டெடிகேசன் செய்றேங்க என்று உச்சிமண்டையில் சுர்..... ருங்க வைக்கிறார்கள்.


காதல் அன்று முதல் இன்று வரைன்னு ஒரு கலக்கல் காமெடி!