09 July 2009

இயல்பை தொலைத்தவர்கள்

அம்மா அவன் அடிக்கிறான்
என்று கைநீட்டியபோது

ஆட்காட்டி விரல்
எதிரிருப்பவனைச் சுட்டி
ஒன்று மேலே நோக்கி

மீத மூன்றும் நம்மையே
பார்த்துக்கொண்டிருக்கும்
அந்தவொரு
அற்புத ! கணத்தில்தான்

நாம்
குழந்தை இயல்பைத்
தொலைத்து
மனிதர்களானோம்.

25 comments:

Vidhya Chandrasekaran said...

நல்லாருக்கு அமித்து அம்மா. இயல்பா இருக்கு.

நட்புடன் ஜமால் said...

சிறு வயதில்

விளையாட்டாய் (ரொம்ப சீரியஸாகூட)

நம்மை குற்றம் சொல்லும் ஒருவரை பார்த்து சொல்லும் சொல் இது

இதை யோசித்து ...

ம்ம்ம் அருமை ...

தமிழ் அமுதன் said...

///மீத மூன்றும் நம்மையே
பார்த்துக்கொண்டிருக்கும்
அந்தவொரு
அற்புத ! கணத்தில்தான்

நாம்
குழந்தை இயல்பைத்
தொலைத்து
மனிதர்களானோம். //


எந்த கணத்திலும் நாங்கல்லாம் திருந்த மாட்டோம்ல!!;;)

ஆ.சுதா said...

உண்மை!

அ.மு.செய்யது said...

// அற்புத ! கணத்தில்தான் //

ஆச்சரிய குறி இருக்குமிடத்தில் "கோள்மூட்டி" கணம் என்று நான் பொருள் அமைத்து கொண்டேன்.

ரசிக்க முடிந்தது அமித்து அம்மா.

Good one !!

Deepa said...

:-) அற்புதம்!

அகநாழிகை said...

அமிர்தவர்ஷினி அம்மா,

அப்பவே ஆரம்பிச்சுட்டீங்களா...!

சும்மா சொன்னேன். நல்ல கவிதை என்பதோடு யோசிக்க வைத்த கவிதை.
வாழ்த்துக்கள்.

‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்

குடந்தை அன்புமணி said...

இருப்பை இப்படி இயல்பாய் சொல்லிவிட்டீர்கள்.

ராமலக்ஷ்மி said...

அருமை அமித்து அம்மா. நம்ம இன்னொசன்ஸ் தொலையும் தருணத்தை எவ்வளவு அழகாய் சொல்லிட்டீங்க!!

ராமலக்ஷ்மி said...

பதிவை இன்னும் தமிழ் மணத்தில் இணைக்கவில்லை போலிருக்கிறதே!

சந்தனமுல்லை said...

:-))) உண்மைதான்! கவிதை நல்லாருக்கு அமித்து அம்மா!

அப்துல்மாலிக் said...

அய் நல்லாக்கீது சின்னப்புள்ளை விளையாட்டூ

அமுதா said...

mm... sariyaaa sonneenga...

நாணல் said...

unmai thaan amithu ammaa...

Rajalakshmi Pakkirisamy said...

unmai thaan :)

sakthi said...

நாம்
குழந்தை இயல்பைத்
தொலைத்து
மனிதர்களானோம்.

சிறுகவிதையாய் இருப்பினும்
அழகான கவிதை....

அருமை

Dhiyana said...

உண்மை..

IKrishs said...

Idukkum Ippo nadakkum padivulaga galattakkalakkum yedhuvum sambantham illaye.. :)
Krish

"உழவன்" "Uzhavan" said...

இந்த மனிதக்குணம் கண்முன்னால் மலிந்து கிடக்கிறது இப்போது. அழகு :-)

Unknown said...

v.v.v.nice poem amithummma ;)))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ம்....

நாஞ்சில் நாதம் said...

:))

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்

kanagu said...

நல்ல கவிதைங்க..

/*
நாம்
குழந்தை இயல்பைத்
தொலைத்து
மனிதர்களானோம்*/

இந்த வரிகள ரசித்தேன் :)

நர்சிம் said...

ரொம்ப நல்லா இருந்தது..எனக்கு.