அம்மா அவன் அடிக்கிறான்
என்று கைநீட்டியபோது
ஆட்காட்டி விரல்
எதிரிருப்பவனைச் சுட்டி
ஒன்று மேலே நோக்கி
மீத மூன்றும் நம்மையே
பார்த்துக்கொண்டிருக்கும்
அந்தவொரு
அற்புத ! கணத்தில்தான்
நாம்
குழந்தை இயல்பைத்
தொலைத்து
மனிதர்களானோம்.
யாதுமாகி நின்ற காளி - நின்னைச் சில வரங்கள் கேட்பேன் - அவை நேரே இன்றெனக்குத் தருவாய் - என்றன் முன்னைத் தீயவினைப் பயன்கள் - இன்னும் மூளாதழிந்திடுதல் வேண்டும் - இனி என்னைப் புதிய உயிராக்கி - எனக்கேதுங் கவலையறச் செய்து - மதிதன்னை மிகத் தெளிவு செய்து - என்றும் சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்!
09 July 2009
06 July 2009
பெட்டிக்குள் தாலி
நேற்று அக்கா வீட்டுக்கு போயிருந்தேன்,அக்கா வீடு காலி பண்ணவேண்டியிருந்ததால், பொருட்களை ஒழித்து, அடுக்கும் வேலையிருந்தது.வேண்டும், வேண்டா பொருட்களை பிரித்தெடுத்து தனியாக கட்டி வைத்துவிட்டு, அலமாரிகளை குடைந்தோம்.கொஞ்சம் அடுக்கு டப்பாக்கள், இதர பாத்திரங்கள் என்று எல்லாவற்றையும் எடுத்து வெளியே வைத்தாயிற்று. ஒரு ரவுண்டு டப்பாவை திறந்தால், அதற்குள் ஒரு சின்ன சில்வர் டப்பா, அப்புறம இந்த நகைக்கடைகளில் நகை வாங்கும் போது கொடுக்கும் பிளாஸ்டிக் டப்பா இருந்தது. ஆர்வ மிகுதியால் ஒன்றை நான் திறந்துப் பார்த்தேன்.
கொஞ்சம் அதிர்ச்சி, அதில் அம்மாவின் சங்கிலியற்ற தாலி, அப்புறம் குண்டு மணிகள் இருந்தது. எந்த உணர்ச்சியும் காட்டாமல், அந்த டப்பால என்ன இருக்கு என்றேன். அதற்குள் அக்கா சில்வர் டப்பாவை திறந்து பார்த்து, இதுல என்னோடது இருக்குடி என்றாள். பார்த்ததில் அதிலேயும் தாலி,கால் காசு போன்ற இத்யாதிகள். அதை அரைக்கணம் பார்த்துவிட்டு மூடிவைத்து விட்டாள் அக்கா. ஆனால் அந்த நிமிஷம் அக்காவின் மனதில் என்ன உணர்ச்சி எழுந்திருக்கும் என்று என்னால் உணர்ந்து உண்ரமுடியா நிலை.
இதே பொருள், கிட்டத்தட்ட 28 வருடங்களாக அவள் இதயத்தோடு இதயமாய், உயிரோடு உயிராய், உணர்வோடு உணர்வாய் ஒன்றப்பட்டு இருந்த விஷயம் தானே. அம்மா அந்த டப்பாவில் என்னவென்று கேட்க, எதுவும் சொல்லாமல் டப்பாவை திறந்துகாட்டினேன். இதுவா, எடுத்து உள்ள வை என்ற வார்த்தைகள் வெளிப்பட்டது. அவர்களிருவருக்கும் இது ஒரு சாதாரணமாய் (சாதா ரணமா அது) விஷயமாகப்போய்விட்டது.
ஆனால் இதே அம்மாவும், அக்காவும் இதற்கு கொடுத்த முக்கியத்துவங்கள் எத்தனை. எங்கள் திருமண நிகழ்வுகளின் போது, இருவருமே தாலி கட்டும் நேரத்தின் போது ஒரு படப்படப்போடும், பிறகு தாலியை முடிப்பதில் யார் யார் முன்னாடி இருக்கவேண்டும் என்று பார்த்துக்கொண்டதிலும், பின்பு மூன்றாவது மாதம் தாலி பிரித்து மாற்றும் போது எத்துணை சம்பிரதாயங்கள். நேரம் காலம் எனப் பார்த்து பார்த்து. அதிலும் தாலி கோர்க்கப்பட்டிருக்கும் மஞ்சள் கயிற்றை மாற்றவேண்டுமென்றால் நாள், கிழமை, நட்சத்திரம், பார்த்து என நீளும் சம்பிரதாயங்கள் அவை. அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்த ஒரு பொருளை வெறுமனே பிளாஸ்டிக், சில்வர் டப்பாவில் பார்க்கும் போது எழுந்த உணர்வுகள் இருக்கிறதே. அவை சொல்லி மாளாது.
தாலி கட்டப்படும் நேரத்தில் இருக்கும் முக்கியத்துவத்தை, எம் மக்கள் அதை கழட்டப்படும் போதும் வழங்கினார்கள் என் அம்மாவுக்கும் பிறகு அக்காவிற்கும். ஏன், பெண்கள் சுமங்கலியாக போகவேண்டும் என்று நினைக்கிறார்கள் என்ற வாக்கியத்தின் அர்த்தத்தை உணர்நத நேரம் அது. இது போன்ற ஒரு அனுபவத்தை கற்பனைகளிலும் நினைக்கமுடியாது. மரணத்தை விடவும் கொடுமையான அனுபவங்கள். உடம்பே உதறலெடுத்து, அய்யோ வேண்டாம் வேண்டாம் என்ற அக் கணம் நிகழ்ந்தே விட்டது, வாழ்வில்.முக்காடு போட்ட அம்மாவின் முகத்தைப் பார்க்கக்கூட திராணியில்லாமல், பெருங்குரலெடுத்து கத்தியழுத போது, மிகவும் சாதாரணமாக சொன்னது சில உறவுகள். என்னடி புதுசா, என்னமோ உங்கம்மாவுக்கு மட்டும்தான் இப்படி ஆன மாதிரி, இதை விட சின்ன வயசுல இருக்கறதுங்களுக்கே நடக்குது. நாங்கல்லாம் இல்ல இப்போ என வரிசையாய் எனக்கு நேர்ந்தது, இவளுக்கு இப்போது நேர்ந்துவிட்டதே, அவ்ளோதான், இதைப்போய் என்ற ரேஞ்சில் இருந்தது அவர்களின் வார்த்தைகள். அதற்கடுத்து வந்த நாட்கள் இதை விடவும் கொடுமை, பூவும், பொட்டும், கழுத்துச்சங்கிலி என வளைய வந்த அம்மா, எதுவுமற்று விபூதியோடு கைவிடப்பட்டார்கள். ஏதாவது வச்சிக்கோம்மா என்றபோது, ம்ம்ச்சும், விடும்மா என்ற வார்த்தைகளோடு போய்விட்டார்கள். ஆனால் வருடாந்திரமாய் குங்குமம் வைத்துவந்த பச்சைத்தடம், அதன் மேல் பொருந்தா விபூதி, கண்ணாடி அல்லாத உலோக வளையல்கள் என அம்மாவை நேருக்கு நேராக பார்க்க கொஞ்சமல்ல நிறையவே சங்கடங்கள். இத்தோடு முடிந்ததடா கூத்து என்று நாட்களோடு சகஜமாகி விட நேரும்போது, இன்னும் நீ பார்க்கவேண்டியது நிறைய என்று கடவுள் உணர்த்தி விதி அக்காவின் வாழ்வில் விளையாடியது. இந்த முறை, மாமாவின் உடல், மயானததிற்கு எடுத்துச்சென்றவுடனே எனக்குப் பிடித்த கிலி, அடுத்து வரும் பதினாறாம் நாள் காரியம் தான்.
காரியத்துக்கு நாள் பார்க்க, அய்யருக்கு சொல்ல, சாப்பாட்டுக்கு, காரிய பத்திரிக்கைக்கு என வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டேயிருந்தாலும், உள்ளுக்குள் பயம் உதறலெடுத்துக்கொண்டிருந்தது. அந்த பதினாறாம் நாள் வராமயே போனா நல்லாஇருக்குமே என்று எண்ணியபடி,
அதற்கு முந்திய நாள் வீட்டிற்கு வந்த உறவுகளுக்கு, ரொம்ப சடங்கெல்லாம் செஞ்சு சங்கடம் வேணாம், அப்படியே விட்டுடங்க, அக்காவ என்ற போது, எதுவும் சொல்லவில்லை யாரும். இதற்கென்றே மெனக்கெட்டு வந்த ஒரு ஆயா மட்டும், அத காலையில பாத்துக்கலாம் என்றது.
அப்படியே குத்திக்கொல்லலாம் போல வந்தது ஆத்திரம். ஆச்சு, அதிகாலை வந்து எல்லாம் முடிந்து, அழகான அக்காவை அலங்கோலப் படுத்தி தனியறையில் அமரவைத்து, போதாக்குறைக்கு போய்ப் பார், போய்ப்பாரு என்று உறவுகளின் கூச்சல் வேறு.
கொஞ்சம் அதிர்ச்சி, அதில் அம்மாவின் சங்கிலியற்ற தாலி, அப்புறம் குண்டு மணிகள் இருந்தது. எந்த உணர்ச்சியும் காட்டாமல், அந்த டப்பால என்ன இருக்கு என்றேன். அதற்குள் அக்கா சில்வர் டப்பாவை திறந்து பார்த்து, இதுல என்னோடது இருக்குடி என்றாள். பார்த்ததில் அதிலேயும் தாலி,கால் காசு போன்ற இத்யாதிகள். அதை அரைக்கணம் பார்த்துவிட்டு மூடிவைத்து விட்டாள் அக்கா. ஆனால் அந்த நிமிஷம் அக்காவின் மனதில் என்ன உணர்ச்சி எழுந்திருக்கும் என்று என்னால் உணர்ந்து உண்ரமுடியா நிலை.
இதே பொருள், கிட்டத்தட்ட 28 வருடங்களாக அவள் இதயத்தோடு இதயமாய், உயிரோடு உயிராய், உணர்வோடு உணர்வாய் ஒன்றப்பட்டு இருந்த விஷயம் தானே. அம்மா அந்த டப்பாவில் என்னவென்று கேட்க, எதுவும் சொல்லாமல் டப்பாவை திறந்துகாட்டினேன். இதுவா, எடுத்து உள்ள வை என்ற வார்த்தைகள் வெளிப்பட்டது. அவர்களிருவருக்கும் இது ஒரு சாதாரணமாய் (சாதா ரணமா அது) விஷயமாகப்போய்விட்டது.
ஆனால் இதே அம்மாவும், அக்காவும் இதற்கு கொடுத்த முக்கியத்துவங்கள் எத்தனை. எங்கள் திருமண நிகழ்வுகளின் போது, இருவருமே தாலி கட்டும் நேரத்தின் போது ஒரு படப்படப்போடும், பிறகு தாலியை முடிப்பதில் யார் யார் முன்னாடி இருக்கவேண்டும் என்று பார்த்துக்கொண்டதிலும், பின்பு மூன்றாவது மாதம் தாலி பிரித்து மாற்றும் போது எத்துணை சம்பிரதாயங்கள். நேரம் காலம் எனப் பார்த்து பார்த்து. அதிலும் தாலி கோர்க்கப்பட்டிருக்கும் மஞ்சள் கயிற்றை மாற்றவேண்டுமென்றால் நாள், கிழமை, நட்சத்திரம், பார்த்து என நீளும் சம்பிரதாயங்கள் அவை. அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்த ஒரு பொருளை வெறுமனே பிளாஸ்டிக், சில்வர் டப்பாவில் பார்க்கும் போது எழுந்த உணர்வுகள் இருக்கிறதே. அவை சொல்லி மாளாது.
தாலி கட்டப்படும் நேரத்தில் இருக்கும் முக்கியத்துவத்தை, எம் மக்கள் அதை கழட்டப்படும் போதும் வழங்கினார்கள் என் அம்மாவுக்கும் பிறகு அக்காவிற்கும். ஏன், பெண்கள் சுமங்கலியாக போகவேண்டும் என்று நினைக்கிறார்கள் என்ற வாக்கியத்தின் அர்த்தத்தை உணர்நத நேரம் அது. இது போன்ற ஒரு அனுபவத்தை கற்பனைகளிலும் நினைக்கமுடியாது. மரணத்தை விடவும் கொடுமையான அனுபவங்கள். உடம்பே உதறலெடுத்து, அய்யோ வேண்டாம் வேண்டாம் என்ற அக் கணம் நிகழ்ந்தே விட்டது, வாழ்வில்.முக்காடு போட்ட அம்மாவின் முகத்தைப் பார்க்கக்கூட திராணியில்லாமல், பெருங்குரலெடுத்து கத்தியழுத போது, மிகவும் சாதாரணமாக சொன்னது சில உறவுகள். என்னடி புதுசா, என்னமோ உங்கம்மாவுக்கு மட்டும்தான் இப்படி ஆன மாதிரி, இதை விட சின்ன வயசுல இருக்கறதுங்களுக்கே நடக்குது. நாங்கல்லாம் இல்ல இப்போ என வரிசையாய் எனக்கு நேர்ந்தது, இவளுக்கு இப்போது நேர்ந்துவிட்டதே, அவ்ளோதான், இதைப்போய் என்ற ரேஞ்சில் இருந்தது அவர்களின் வார்த்தைகள். அதற்கடுத்து வந்த நாட்கள் இதை விடவும் கொடுமை, பூவும், பொட்டும், கழுத்துச்சங்கிலி என வளைய வந்த அம்மா, எதுவுமற்று விபூதியோடு கைவிடப்பட்டார்கள். ஏதாவது வச்சிக்கோம்மா என்றபோது, ம்ம்ச்சும், விடும்மா என்ற வார்த்தைகளோடு போய்விட்டார்கள். ஆனால் வருடாந்திரமாய் குங்குமம் வைத்துவந்த பச்சைத்தடம், அதன் மேல் பொருந்தா விபூதி, கண்ணாடி அல்லாத உலோக வளையல்கள் என அம்மாவை நேருக்கு நேராக பார்க்க கொஞ்சமல்ல நிறையவே சங்கடங்கள். இத்தோடு முடிந்ததடா கூத்து என்று நாட்களோடு சகஜமாகி விட நேரும்போது, இன்னும் நீ பார்க்கவேண்டியது நிறைய என்று கடவுள் உணர்த்தி விதி அக்காவின் வாழ்வில் விளையாடியது. இந்த முறை, மாமாவின் உடல், மயானததிற்கு எடுத்துச்சென்றவுடனே எனக்குப் பிடித்த கிலி, அடுத்து வரும் பதினாறாம் நாள் காரியம் தான்.
காரியத்துக்கு நாள் பார்க்க, அய்யருக்கு சொல்ல, சாப்பாட்டுக்கு, காரிய பத்திரிக்கைக்கு என வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டேயிருந்தாலும், உள்ளுக்குள் பயம் உதறலெடுத்துக்கொண்டிருந்தது. அந்த பதினாறாம் நாள் வராமயே போனா நல்லாஇருக்குமே என்று எண்ணியபடி,
அதற்கு முந்திய நாள் வீட்டிற்கு வந்த உறவுகளுக்கு, ரொம்ப சடங்கெல்லாம் செஞ்சு சங்கடம் வேணாம், அப்படியே விட்டுடங்க, அக்காவ என்ற போது, எதுவும் சொல்லவில்லை யாரும். இதற்கென்றே மெனக்கெட்டு வந்த ஒரு ஆயா மட்டும், அத காலையில பாத்துக்கலாம் என்றது.
அப்படியே குத்திக்கொல்லலாம் போல வந்தது ஆத்திரம். ஆச்சு, அதிகாலை வந்து எல்லாம் முடிந்து, அழகான அக்காவை அலங்கோலப் படுத்தி தனியறையில் அமரவைத்து, போதாக்குறைக்கு போய்ப் பார், போய்ப்பாரு என்று உறவுகளின் கூச்சல் வேறு.
வாய்ச்சொல்லால் எத்தனை பேரை வீழ்த்த முடியும் ?. அக்காவை நேருக்கு நேர் பார்க்க முடியாமல் நிலையற்ற கண்களோடும், மனதோடும் பொங்கி வந்த அழுகையோடும் உள்ளே போகும் போது, அங்கே எனக்கு முன்னரே எனது அண்ணன் (சித்தி பையன்) அழுது வீங்கிய கண்களோடு.
அவரைப் பார்த்தபின் சொல்லத்தான் வேண்டுமா. எத்துணை மன தைரியம் வாய்க்கப்பெற்ற ஆண்களாக இருந்தாலும் கலங்கும் நேரம் என்று ஒன்று உண்டானால் அது அனேகமாக இது போன்ற சங்கடமான சம்பிரதாய கால நேரமாகத்தான் இருக்கும். என் அண்ணனுக்கு வாய்த்த இந்த நேரம் எத்துணையோ அண்ணன்களுக்கும் நேர்ந்திருக்கும், உணர்வுகளை அவர்களும் மென்று விழுங்கியிருப்பார்கள். தந்தை போன அவஸதை ஒரு புறமும், தாயாரின் இந்தக் கோலமும் ஒரு சேரத்தாங்கும் மனவலிமையையும் பெற்று, மேலும் ஆக வேண்டியதை ! பார்க்க வேண்டிய காலகட்டமல்லவா அது.
அது என் அக்கா மகனுக்கும் வாய்த்தது, காரியத்திற்கான வெளி சம்பிரதாயங்களுக்கு செல்லும் முன் அக்காவை பார்க்கவந்த அவன், சொல்லிய சொல், ம்மா, (உடைந்த ஒரு குரலோடு) நான் வரம்போது, நீ இப்டியிருக்கக்கூடாதும்மா, சொல்லிட்டேன் என்ற படி போனான். ஆனால் அவன் எதிர்பார்த்தபடி எதையுமே நடக்கவிடவில்லை எம்மக்கள். நீட்டி.......க்கப்பட்ட சம்பிரதாயங்கள், கோபம் வந்தாலும் மறுத்து சொன்னாலும், நிகழ்த்தப்பட்டுக்கொண்டே இருந்தன எல்லாம். எல்லாவற்றையும் கடந்து வந்தபின், எங்களின் வற்புறுத்தலுக்காக அக்கா ஒரு சிறிய பொட்டு வைக்க ஒத்துக்கொண்டாள். ஆனால் அவளுக்கு பிடித்த கண்ணாடி வளையல்கள் ?
இந்த நிகழ்வுகளுக்குப் பின்னர், நெற்றி நிறைய குங்குமத்தோடு இருக்கும் பெண்களை, வயதான அம்மாக்களை கண்ணெடுத்துப்பார்க்கவே அவ்வளவு மனதுக்குள் குறுகுறுப்பாய் இருந்தது. உடன் சொல்லமுடியாத எண்ணங்கள் எழுந்து அது ப்ரார்த்தனையில் போய் முடியும். இப்போதும் வழியிலோ, ட்ரெயினிலோ, திருமணங்களிலோ இது போன்ற அலங்காரங்களோடு இருக்கும் பெண்களை பார்க்க நேர்ந்தால், சில எண்ணங்கள் எழவே செய்கிறது. தீபாவின் நகைப்புக்காக அல்ல படிக்கும் போது எனக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது. நாம் வழக்கமாக அணியும் ஒரு செயின் போல, தாலிச்செயினுக்கும் மிகப்பெரிய முக்கியத்துவமென்று ஏதுமிராமலிருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று தோன்றியது. அது போன்றே பூவுக்கும், குங்குமத்திற்கும் மற்றும் கண்ணாடி வளையல்களுக்கும்.
காலம் காலமாய், சடங்கு, சம்பிரதாயங்களில் ஊறிப்போனவர்களுக்கு, இப்படி கொடுத்துப்பின் பிடுங்கினால் அது எப்படியிருக்கும் என்பதை என்னால் உணரமுடிகிறது. இறப்புக்குப் பின்னர் இப்படியொரு இழிநிலையும், மீண்டும் எல்லாவற்றையும் போட்டுக்கொண்டால் பிறரால் வரும் பழிநிலையும் மாற என்னிடம் வேண்டுதல்கள் மட்டுமே உள்ளன. உங்களிடம்?
29 June 2009
ராசிபலன்
ஜ்..ஜோசியம், கைர்..ரேகை, பேர்..ராசி பலன் என இத்யாதிகளில் நம்பிக்கை இல்லாவிட்டாலும், அவ்வப்போது இல்லை எப்போதாவது தேதி காலண்டரில் பேப்பரை கிழிக்கும்போதும், தினசரிகளில் போடப்படும் வார, மாத பலன்கள் கண்ணில் பட்டுவிட்டால் கொஞ்சம் சுவாரஸ்யமாக இருந்தால் (சாதகமாக இருந்தால்) படிக்கும் பழக்கமுண்டு. இதனோடு ஒத்துப்போகும் சில சமீபகால நிகழ்வுகள்.
22,23 சந்திராஷ்டம் இருப்பதால்,வாக்கு வாதங்கள் வைத்துக்கொள்ள வேண்டாம் என்றிருக்கும், 22,23 தானே என்று அசால்ட்டாக விட்டுவிட்டால் அன்றைக்குத்தான் தேதி 23 ஆக இருக்கும். உடனே நிகழ்ந்தவைகளை ராசி பலன்களோடு பொருத்தும் நிகழ்வோடு ஈடுபட சில ஒத்துப்போகும். ஆமால்ல, நாம அவங்க கிட்ட இப்படி பேசியிருக்கக்கூடாதுல்ல. அதுனாலதானே அப்படியாச்சு என்பது போல. உடனே உள்ளிருக்கும் சாத்தான் (அதாங்க கோபம்) ஓடி வரும், நீ என்ன சும்மாவா பேசுன அன்னைக்கு சந்திராஷ்டமம் இல்ல, அதனால தான் பேசுன (இல்லன்னாலும், நாமதான் நாக்குல தேள் கொடுக்க வெச்சுக்கிட்டு அலையற ராசியாச்சே - கோபங்குறது பால் பொங்குற கணக்கா பாத்துக்கிட்டு இருக்கும்போதே புஸ் ஸுன்னு பொங்கிடுமே).
சில சமயம் பணவிரயம் ஆகும் என்றிருக்கும். எதையாவது செய்யவோ, வாங்கவோ நினைக்கும் போது வீண் வியம் ஆகும்னு போட்டிருந்துதே என்று சட்டென அந்த கருப்பு வரிகள் ஞாபகத்திற்கு வரும். உடனே மனசு, நாம என்ன வீணானதுக்க செலவு பண்ணப்போறோம் வேண்டியதற்குத் தானே என்றபடி கடைக்குள் காலடி வைத்தால், கண்டிப்பாக வாங்கிய பொருள் நன்றாக இருக்காது, இல்லையென்றால் தேவையே இல்லாவிட்டாலும் ஏதாவது ஒன்று வாங்கியாக வேண்டிய நிர்ப்பந்தம், காசு கட்டும் இடத்தில் மனம் அடித்துக்கொண்டாலும் அதான் வீண் விரயம்னு போட்டிருந்தானே, இப்படி செலவாகலனாலும் வேற எப்படியாச்சும் செலவாகியிருக்கும் என்று சுய சமாதானங்களில் ஈடுபட வேண்டியிருக்கும்.
ஒரு முறை அமித்து அப்பா உடம்பு சரியில்லாமல் வீட்டில் இருந்த போது, தேதி கிழிக்கும் காலண்டரில் அவர் ராசிக்கு சோகம் என்று ஒரு வார காலம் முழுவதும் போட்டிருந்தது, அதே நாட்களில் என் ராசிக்கு எதிராக மகிழ்வு என்று போட்டிருந்தது. எதேச்சையாக இதை கவனித்த அவர், இதைப் பாரேன் என்றார். பார்த்த, படித்த எனக்கு கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.
வடக்கே சூலம், தெற்கே சூலம் என்றிருப்பதை சிறு வயதில் படிக்க நேரிட்டு, அம்மாவை வினவும் போதெல்லாம், அது என்ன கர்மமோ என்று சொல்லிவிடுவார்கள். அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் ராகு காலமும், எமகண்டமும் மட்டும்தான். படிக்கவில்லையானாலும், திங்கள் - ஞாயிறு எவ்வப்போது கால கண்டங்கள் இருக்கும் என்பது அத்துப்படியாயிருக்கும். ஆனால் எனக்கு இந்த சூலம் என்ற விஷயம் புரிபடாத ஒன்றாகையால், இதைப் பார்க்கும்போதெல்லாம், வடக்கோ, தெற்கோ கையில் சூலம் வைத்துக்கொண்டிருக்கும் ஏதாவது கடவுளை கற்பனை செய்துகொண்டு சமாதானமாகிவிடும். இது இன்றைக்கு நினைக்கும்போது சிரிப்பாக இருந்தாலும், சூலத்திற்கான அர்த்தம் விளங்கவேயில்லை.
அதே போல் எட்டு என்ற எண்ணை கவனிக்கும் நேரும்போது என் தோழி பாலஜோதியின் நினைவும் தவறாமல் நினைவுக்கு வரும். அவள் பிறந்த தேதி எட்டு. அதனால மேடம் ஒரு பெரிய லிஸ்ட்டே வெச்சிருப்பாங்க. பாருங்க இதுனாலதான் எனக்கு எதுவுமே வொர்க் அவுட் ஆகல என்பது போல். அவள் சொல்வதும் சில சமயம் மேட்ச் ஆகும். நன்றாக படித்தாலும், முதலிடம் வராதது, எம்.எஸ்ஸி, எம்.ஃபில் படித்திருந்தாலும், ஏதோ ஒரு துக்கடா கம்பெனியில் குறைந்த சம்பளத்தில் வேலை பார்ப்பது, இன்னும் கல்யாணம் ஆகாதது என்று மேடம் பார்க்கும் போது / போன் செய்யும் போது சொல்ல ஒரு பெரிய லிஸ்ட்டே வைத்திருப்பார்கள்.:(
எட்டென்றால் நினைவுக்கு வரும் மற்றுமொரு நபர் என் ரெண்டாவது பாஸ். மனுசர், 8,17, 26 தேதிகளில் எந்த லெட்டரிலும் கையெத்திட மாட்டார். அப்படி தலைபோகும் அவசரமென்றாலும், எப்படியும் கொரியர்லதானே போகப்போகுது, நாளைக்கி டேட்லயே லெட்டர் இருக்கட்டும் என்பார். நல்லவேளை
டெண்டர் ஃபைல் செய்யப்போகும் போது ராசியான் நபர்தான் எதிரில் வரவேண்டுமென்ற எந்த சட்டதிட்டங்களையும் வைத்துக்கொள்ளவில்லை.
இது தொடர்பாக, நினைவடுக்கில் இருந்தவொரு மிரட்டல் அனுபவம். (நான் பனிரெண்டாவது படிக்கும்போது என்று நினைக்கிறேன்) கைர்ரேக, ஜ்ஜோசியம் பாக்கறதே என்று ஒரு மதியானப் பொழுதில் ஒருவர் குரல் கொடுத்துக்கொண்டு வர, நாங்கள் குடியிருக்கும் காம்பவுண்ட்டில் இருக்கும் ஒருவர் அவரைக்கூப்பிட்டு கையைக் காட்ட, அவர் பட்டு பட்டுன்னு புட்டு புட்டு வைத்துவிட்டாராம்!!!, இதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த அக்காவை கவனித்த அந்த ஜோசியக்காரர், அம்மா மொகத்துல ஒரு சஞ்சலம் குடி கொண்டிருக்குது, பார்க்க சிரிச்ச மொகமா இருந்தாலும் என்று கதைவிட்டிருக்கிறார். முதலில் மிரண்டாலும், இவர் என்னதான் கதை விடுகிறார் பார்ப்போம் என, அக்காவும் கையை நீட்ட, அவர் விட்ட கதை, உனக்கும் உன் கணவருக்கும் கொஞ்ச நாளா ஆகல, அவரு ஒரு வாகன ஓட்டி, அவருக்கு ஒரு கண்டமிருக்கு, என்று சொல்லிக்கொண்டே ஜோசியக்கட்டின் உள்ளிருந்த சீட்டை எடுத்துப்போட்டதில் அதில் இரு பல்லிகள் சண்டை போட்டு, ஒன்று ரத்தக்கறைகளோடு விழுவது மாதிரியான படம். படத்தை பார்த்த அக்காவிற்கு பக். இதோடு நிற்கவில்லை பல்லி ஜோசியம். இதற்கு பரிகாரமிருக்கு.
22,23 சந்திராஷ்டம் இருப்பதால்,வாக்கு வாதங்கள் வைத்துக்கொள்ள வேண்டாம் என்றிருக்கும், 22,23 தானே என்று அசால்ட்டாக விட்டுவிட்டால் அன்றைக்குத்தான் தேதி 23 ஆக இருக்கும். உடனே நிகழ்ந்தவைகளை ராசி பலன்களோடு பொருத்தும் நிகழ்வோடு ஈடுபட சில ஒத்துப்போகும். ஆமால்ல, நாம அவங்க கிட்ட இப்படி பேசியிருக்கக்கூடாதுல்ல. அதுனாலதானே அப்படியாச்சு என்பது போல. உடனே உள்ளிருக்கும் சாத்தான் (அதாங்க கோபம்) ஓடி வரும், நீ என்ன சும்மாவா பேசுன அன்னைக்கு சந்திராஷ்டமம் இல்ல, அதனால தான் பேசுன (இல்லன்னாலும், நாமதான் நாக்குல தேள் கொடுக்க வெச்சுக்கிட்டு அலையற ராசியாச்சே - கோபங்குறது பால் பொங்குற கணக்கா பாத்துக்கிட்டு இருக்கும்போதே புஸ் ஸுன்னு பொங்கிடுமே).
சில சமயம் பணவிரயம் ஆகும் என்றிருக்கும். எதையாவது செய்யவோ, வாங்கவோ நினைக்கும் போது வீண் வியம் ஆகும்னு போட்டிருந்துதே என்று சட்டென அந்த கருப்பு வரிகள் ஞாபகத்திற்கு வரும். உடனே மனசு, நாம என்ன வீணானதுக்க செலவு பண்ணப்போறோம் வேண்டியதற்குத் தானே என்றபடி கடைக்குள் காலடி வைத்தால், கண்டிப்பாக வாங்கிய பொருள் நன்றாக இருக்காது, இல்லையென்றால் தேவையே இல்லாவிட்டாலும் ஏதாவது ஒன்று வாங்கியாக வேண்டிய நிர்ப்பந்தம், காசு கட்டும் இடத்தில் மனம் அடித்துக்கொண்டாலும் அதான் வீண் விரயம்னு போட்டிருந்தானே, இப்படி செலவாகலனாலும் வேற எப்படியாச்சும் செலவாகியிருக்கும் என்று சுய சமாதானங்களில் ஈடுபட வேண்டியிருக்கும்.
ஒரு முறை அமித்து அப்பா உடம்பு சரியில்லாமல் வீட்டில் இருந்த போது, தேதி கிழிக்கும் காலண்டரில் அவர் ராசிக்கு சோகம் என்று ஒரு வார காலம் முழுவதும் போட்டிருந்தது, அதே நாட்களில் என் ராசிக்கு எதிராக மகிழ்வு என்று போட்டிருந்தது. எதேச்சையாக இதை கவனித்த அவர், இதைப் பாரேன் என்றார். பார்த்த, படித்த எனக்கு கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.
வடக்கே சூலம், தெற்கே சூலம் என்றிருப்பதை சிறு வயதில் படிக்க நேரிட்டு, அம்மாவை வினவும் போதெல்லாம், அது என்ன கர்மமோ என்று சொல்லிவிடுவார்கள். அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் ராகு காலமும், எமகண்டமும் மட்டும்தான். படிக்கவில்லையானாலும், திங்கள் - ஞாயிறு எவ்வப்போது கால கண்டங்கள் இருக்கும் என்பது அத்துப்படியாயிருக்கும். ஆனால் எனக்கு இந்த சூலம் என்ற விஷயம் புரிபடாத ஒன்றாகையால், இதைப் பார்க்கும்போதெல்லாம், வடக்கோ, தெற்கோ கையில் சூலம் வைத்துக்கொண்டிருக்கும் ஏதாவது கடவுளை கற்பனை செய்துகொண்டு சமாதானமாகிவிடும். இது இன்றைக்கு நினைக்கும்போது சிரிப்பாக இருந்தாலும், சூலத்திற்கான அர்த்தம் விளங்கவேயில்லை.
அதே போல் எட்டு என்ற எண்ணை கவனிக்கும் நேரும்போது என் தோழி பாலஜோதியின் நினைவும் தவறாமல் நினைவுக்கு வரும். அவள் பிறந்த தேதி எட்டு. அதனால மேடம் ஒரு பெரிய லிஸ்ட்டே வெச்சிருப்பாங்க. பாருங்க இதுனாலதான் எனக்கு எதுவுமே வொர்க் அவுட் ஆகல என்பது போல். அவள் சொல்வதும் சில சமயம் மேட்ச் ஆகும். நன்றாக படித்தாலும், முதலிடம் வராதது, எம்.எஸ்ஸி, எம்.ஃபில் படித்திருந்தாலும், ஏதோ ஒரு துக்கடா கம்பெனியில் குறைந்த சம்பளத்தில் வேலை பார்ப்பது, இன்னும் கல்யாணம் ஆகாதது என்று மேடம் பார்க்கும் போது / போன் செய்யும் போது சொல்ல ஒரு பெரிய லிஸ்ட்டே வைத்திருப்பார்கள்.:(
எட்டென்றால் நினைவுக்கு வரும் மற்றுமொரு நபர் என் ரெண்டாவது பாஸ். மனுசர், 8,17, 26 தேதிகளில் எந்த லெட்டரிலும் கையெத்திட மாட்டார். அப்படி தலைபோகும் அவசரமென்றாலும், எப்படியும் கொரியர்லதானே போகப்போகுது, நாளைக்கி டேட்லயே லெட்டர் இருக்கட்டும் என்பார். நல்லவேளை
டெண்டர் ஃபைல் செய்யப்போகும் போது ராசியான் நபர்தான் எதிரில் வரவேண்டுமென்ற எந்த சட்டதிட்டங்களையும் வைத்துக்கொள்ளவில்லை.
இது தொடர்பாக, நினைவடுக்கில் இருந்தவொரு மிரட்டல் அனுபவம். (நான் பனிரெண்டாவது படிக்கும்போது என்று நினைக்கிறேன்) கைர்ரேக, ஜ்ஜோசியம் பாக்கறதே என்று ஒரு மதியானப் பொழுதில் ஒருவர் குரல் கொடுத்துக்கொண்டு வர, நாங்கள் குடியிருக்கும் காம்பவுண்ட்டில் இருக்கும் ஒருவர் அவரைக்கூப்பிட்டு கையைக் காட்ட, அவர் பட்டு பட்டுன்னு புட்டு புட்டு வைத்துவிட்டாராம்!!!, இதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த அக்காவை கவனித்த அந்த ஜோசியக்காரர், அம்மா மொகத்துல ஒரு சஞ்சலம் குடி கொண்டிருக்குது, பார்க்க சிரிச்ச மொகமா இருந்தாலும் என்று கதைவிட்டிருக்கிறார். முதலில் மிரண்டாலும், இவர் என்னதான் கதை விடுகிறார் பார்ப்போம் என, அக்காவும் கையை நீட்ட, அவர் விட்ட கதை, உனக்கும் உன் கணவருக்கும் கொஞ்ச நாளா ஆகல, அவரு ஒரு வாகன ஓட்டி, அவருக்கு ஒரு கண்டமிருக்கு, என்று சொல்லிக்கொண்டே ஜோசியக்கட்டின் உள்ளிருந்த சீட்டை எடுத்துப்போட்டதில் அதில் இரு பல்லிகள் சண்டை போட்டு, ஒன்று ரத்தக்கறைகளோடு விழுவது மாதிரியான படம். படத்தை பார்த்த அக்காவிற்கு பக். இதோடு நிற்கவில்லை பல்லி ஜோசியம். இதற்கு பரிகாரமிருக்கு.
நான் ஒரு மந்திரிச்ச கயிறு தரேன், வாங்கி கட்டிக்க, இன்னிலிருந்த ஒருவாரம் அதாகப்பட்டது ஏழு நாளு என்ற ரேஞ்சில் சொன்னதையே திருப்பி திருப்பி போட்டு டயலாக்கை நீட்டி வெள்ளிக்கிழமையில் தான் இந்தப் பரிகாரத்தை செய்யவேண்டும், செஞ்சு முடிச்சவுடனே நீயா பாத்து ஒரு மூன்னூறூ ரூவா (!!!) கொடுத்துரு தங்கச்சி. அவ்ளோதான். அக்காவுக்கு பயம் அதெல்லாம் வேணாங்க என்று சொன்னாலும், அவர் கயிறு தருவதிலே குறியாயிருக்க. அந்த வீட்டில் குடியிருக்கும் ஆஜானுபாகுவான நாகராஜ் வந்து அந்த ஜோசியரை வெறும் ஐந்து ரூபாய் கொடுத்து விரட்டிவிட்டாராம். ஆனாலும் அக்காவிற்கு மனசு ஆறவில்லை. எங்களிடம் சொல்லிய பின்னர் நாங்களும் எவ்வளவோ மன அமைதி படுத்தினாலும், ஒன்னும் வேலைக்காகவில்லை. எல்லாம் சரி, அவன் எப்படி கரெக்ட்டா, வாகன ஓட்டின்னு சொன்னான், மாமா ஆட்டோ தானே ஓட்டுது என்று பாயிண்ட்டை பிடிக்க, என்ன செய்வதன்றே தெரியவில்லை. ஒரு மணி நேரத்திற்குள் வீடே தலை கீழாகிவிட்டது. சரியாக அந்த சமயம் வீட்டுக்கு வந்த மாமா, அந்த மோட்டுத் தெருவுல ஒருத்தன போட்டு அடிச்சுட்டு இருக்கானுங்க, ஒரே கூட்டம், ஆட்டோ வரவே வழியில்ல,வண்டிய அந்த முனையிலயே நிறுத்தி வெச்சுட்டு வந்துட்டேன், சீக்கிரம் சாப்பாடு போடு என்று சொல்ல, நாங்கள் என்னவாம் மாமா என்று கேட்க, அது ஒன்னுமில்லடி, ஏதோ ஜோசியக்காரனாம், பல்லி, ரத்தம் கக்கும்னு ரெண்டு, மூணு வீட்டுல சொல்லியிருக்கான் போல. அதுல யாரோ ஒருத்தவங்க இப்பத்தான் இதையே எங்க வீட்டுல (வேறு தெரு) வந்து சொன்னான், இப்ப இங்கயும் வந்து சொல்றானேன்னு விசாரிச்ச்சு அடி பின்னுக்கிட்டிருக்காங்க என்று சொன்னவுடன், எல்லோர் முகத்தில் நீண்ட நேரம் கட் ஆகி, அதிக வோல்ட்டேஜோடு வந்த கரண்ட் போல ஒரு பிரகாசம். அப்புறமும் அக்கா விடாமல், உருவ ஒற்றுமைகளையெல்லாம் மேட்ச் செய்து கன்ஃபர்ம் செய்துகொண்ட பின் தான் எங்கள் எல்லோருக்கும் சாப்பாடு கிடைத்தது.
24 June 2009
உப்பு
வீட்டை விட்டு எல்லோரும் போய்விட்ட இந்த 10 மணி காலை, ஒரு பெருமழை பெய்து ஓய்ந்த தோற்றத்தை வீட்டிலேயும், தன் மனதிலேயும் உண்டு செய்தது. காலையில் காஃபி குடித்ததோடு சரி, இன்னும் டிபன் ஆகவில்லை, பசித்தாலும் சாப்பிடும் எண்ணமே இல்லை.
எப்படி இருக்கும்? சாப்பாட்டை பார்த்தாலே சட்டென்று உப்பின் ஞாபகம்தான் வருகிறது. சமையலறைக்கு போனாலுமே உப்பின் ஞாபகம்தான். எவ்வளவுதான் கவனமாக இருந்தாலும் எப்படியாவது கூடிவிடுகிறது, இல்லையாவது குறைந்துவிடுகிறது. ஆனால் சரிக்கு சரியாய் இல்லை. கொஞ்ச நாட்களாகத்தான் இப்படியென்றாலும், இன்று எல்லோருமே டிபனை புறக்கணித்ததால் மிகவும் சங்கடப்படுத்திக்கொண்டே இருக்கிறது. அதுவும், உன் கை ரொம்ப பெரிசுங்கறதனால, இப்படியா உப்பை கொட்டி வைப்ப, இதுல என்று தட்டை தள்ளிவிட்டு போனபோது சற்று ஆத்திரமாய் வந்தாலும்,அதன் நிவர்த்திக்கான வழி தெரியவில்லை.
திருப்பி திருப்பி கையைப் பார்த்துக்கொள்கிறேன். பெரிசாக ஒன்றும் தெரியவில்லை, சரியாக, பொருத்தமாகத்தான் இருக்கிறது. கையையே ரொம்ப நேரம் பார்த்துக்கொண்டிருந்ததால், போட்டிருந்த மோதிரமும் கண்ணுக்குப் பட்டது, இவ்வளவு நாளாய் விரலோடு விரலாகத்தான் இருக்கிறது. இன்றுதான் அதன் நுட்பமான வேலைப்பாடுகள் கூடத் தெரிகிறது. சின்ன சின்ன உருண்டையாக, வளையங்களைக் கொண்டு, வளையங்களின் இடுக்கில் அழுக்கு ஏறிப்போயிருக்கிறது. சுத்தம் செய்ய வேண்டும் என்று அந்தக்கணம் தோன்றியது.ஆனால் அடுத்த கணமே உப்பின் நினைவு வந்து ஒட்டிக்கொண்டது. கை சுட்டாலும் பரவால்லை என்று சுட சுட கையில் ஊற்றி, சுவைத்துப் பார்த்தால் எல்லாம் சரியாக இருப்பது போலத்தான் தோன்றுகிறது. இது போன்று உப்பின் சுவை பார்ப்பது கடந்த சில நாட்களாகத்தான். அதற்கு முன்னரெல்லாம் சரியாகத்தான் போய்க்கொண்டிருந்தது. ஒருவேளை நாக்கில் பிரச்சினை இருக்குமோ. நாக்கைப் பார்த்தால் என்ன. சட்டென்று கண்ணாடியின் அருகே போய், நாக்கைப் பார்த்தேன். இரண்டு பக்கமும் திருப்பி திருப்பி பார்த்து, நாக்கை நீட்டிப் பார்த்து என்று செய்ததில் உமிழ்நீர் சுரந்ததுதான் மிச்சம், வேறொன்றும் பலனில்லை.
ச்சே, உப்பு என்ற ஒன்றை கண்டுபிடிக்காமலேயே இருந்திருந்தால் எவ்வளவு நல்லாயிருந்திருக்கும், அப்படியே அதனதன் போக்கில் சாப்பிட்டு நாக்கும் பழக்கப்பட்டு போயிருக்கும், இப்படியே யோசனை நீண்டதில், தான் எப்பவாவது உப்பில்லை என்று உணவை புறக்கணித்திருக்கோமா என்று தோன்றியது.
ஒரு முறை அத்தை வீட்டில் தான் அது நடந்திருக்கிறது. அம்மாவிற்கு பெரும்பாலும் இந்தப்பிரச்சினை வராது, பாட்டிக்கும், அப்பாவின் சத்தத்திற்கு பயந்தே பார்த்துப் பார்த்து சமைப்பாள். ஒரு முறை கூட தப்பிப்போனதில்லை, பிள்ளைகளின் மீது எவ்வளவு கவனம் வைத்திருந்தாலோ, அதே கவனம் உப்பின் மீதும் இருந்திருக்கக்கூடும் என்றே தோன்றுகிறது. சாப்பிடும் போது ஒரு முறை கூட உப்பு வைத்திருக்கும் கலம், கூடத்திற்கு வந்ததில்லை. ஆனால் அத்தை வீட்டில் பொடி உப்பை ஒரு சிறிய டப்பாவில் போட்டு, சாப்பாட்டு மேசை மீது எப்போதுமே இருக்கும். ஓட்டலில் வைத்திருப்பதைப் போல.
அத்தைக்கு அவ்வளவாய் சாப்பாடு, சமையல் என்ற விஷயத்தில் ஈடுபாடு இருக்காது, அதற்காகவே விடுமுறை காலங்களில் அத்தை வீட்டுக்கு ஓடிப்போகத்தோன்றும், இங்கே இருந்திருந்தால் இந்தப் பாட்டியின் பேச்சைக்கேட்டு, அம்மாவும் என்னை நை, நை என்று அதைச் செய், இதைச் செய் என்று நைந்துகொண்டிருப்பாள், செய்யவில்லை என்றால் பாட்டி வைதுக்கொண்டிருப்பாள். இந்த தொந்திரவுக்கே, விடுமுறை வரும் ஒரு வாரத்துக்கு முன்னரே அத்தையை வரச்செய்து, அவளோடு தொத்திக்கொண்டு போய்விடுவது. எந்த தொந்திரவும் இல்லாமல், நினைத்ததை செய்துக்கொண்டு பொழுதோட்டுவது என அவையெல்லாம் கார்காலங்கள். அவ்வப்போது அம்மாவை நினைத்துக்கொண்டாலும், அந்த குண்டு பல்பு போட்ட சமையலைறையை நினைத்தால் கொஞ்சம் பயமாகவே இருக்கும்.
அத்தை அனேகமாய் கலந்த சாதம் மாதிரிதான் செய்வாள். அதுதான் சுலபம், ரசம், சாம்பாருன்னு செஞ்சாலும் சாதத்துல போட்டு கலந்துக்கிட்டுதானே சாப்பிடப்போறோம். தோசை சரியாகவே வார்க்கவராது, சப்பாத்தியும் அதே கதைதான். ஓவ்வொரு தோசையும், சப்பாத்தியும் ஒவ்வொரு தோற்றம் காட்டும், சில சமயம் மேப்பில் இருக்கும் சில நாடுகள் கூட அதே மாதிரி சாயலாய் இருப்பதாய் கூட நினைத்துக்கொண்டு சிரிப்பேன். அத்தை கேட்டால் சொல்லிவிடுவதுண்டு, அதற்கு அவளும் சிரித்துக்கொண்டே, எப்படியும் பிச்சு பிச்சு தானே சாப்பிடறோம், எப்படியிருந்தா என்ன, வயிறு ரொம்புதா. அதப் பாரு என்பாள். ரொம்பவும் மெனக்கெட மாட்டாள் சமையலுக்கு எப்பவுமே, மாமாவும் அதே மாதிரி இருந்ததால், அத்தைக்கு இந்த விஷயத்தில் எந்த பிரச்சினையுமில்லை.
கூடுதலாக இவளின் சமையலின் கைத்திறமை கண்டு, சொந்தக்கார கூட்டங்கள் வந்து டெண்ட் அடிப்பதென்பது மிகமிகக் குறைவு. அத்தைக்கு சமையலில் தான் கைத்திறமை இல்லையே ஒழிய, கை வேலைப்பாடெல்லாம் அழகாய் செய்வாள், அவள் எம்ராய்டரி போட்டால் இன்றைக்கெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கலாம். அத்தையின் ஓய்வு நேரங்களெல்லாம் எம்ப்ராய்டரிதான், சில பத்திரிக்கைகள் நடத்திய போட்டியில் கலந்து கொண்டு பரிசு கூட வாங்கியிருக்கிறாள் இதற்காக. எம்ப்ராய்டரிக்கு நேரம் ஒதுக்குவதற்காகவே சமையலை சீக்கிரம் முடிக்கிறாள் போல என்று கூட தோன்றியது.
மேடம், கொரியர்.......... என்ற கட்டைக் குரல், சட்டென்று நினைவுகளை கலைக்கச்செய்தது. நேரத்தைப் பார்த்தால் 11 மணி என்று காட்டியது. ஏதோ பேங்க்கில் இருந்து வந்த கொரியர், ஸ்டாண்டில் வைத்துவிட்டு, வீட்டை ஒழுங்கு செய்யவே அரைமணி நேரம் பிடித்தது. மறுபடியும் சமையலறை. உப்பு கிலி பிடித்துக்கொண்டது. சாப்பிடத்தோணவில்லை, மீண்டும் ஒரு காபி குடித்துவிட்டு, துணிகளை துவைத்து, காயப்போட மாடிக்கு போனேன். காயப்போடும்போது, அங்கிருந்து மளிகைக்கடை கண்ணில் பட்டது. ஒரு வேளை இவன் தரும் உப்பில் ஏதேனும் ப்ரச்சினையா. அளவாய் போட்டாலும், கரிக்க செய்யும் தன்மையோ. என்ன உப்பு வாங்குகிறோம்,கீழே போய் பார்க்கவேண்டும்.
ச்சே, எங்கே போனாலும் இந்த உப்பு ப்ரச்சினை ஒட்டிக்கொண்டே வருகிறது. பசித்தது, காலையில் சாப்பிடத்தாலோ என்னவோ, தயிர் சாதம் சாப்பிடலாம் என்று தோன்றியது, சாதத்தில் தயிரை விட்டு பிசையும்போது தோன்றியது, உப்பு போடாமல் இன்று சாப்பிட்டால் என்ன, இன்று காலையிலிருந்து என்னோடு ஒட்டிக்கொண்டே வந்து உயிரை வாங்கும் இந்த உப்பு நினைவுக்கு இதுதான் சரியான தண்டனை, உன்னைப் புறக்கணிக்கிறேன் உப்பே என்றபடி தயிர்சாதத்தை வாயில் வைத்தால் என்னவோ போலிருந்தது.
வேண்டாம் என்றால் வேண்டாம் தான் என்று பிடிவாதமாய், தட்டை கையிலெடுத்துக்கொண்டு ஹாலுக்கு வந்து டி.வி.யைப் போட்டேன். போட்டவுடனேயே இந்தக் காட்சிதான் ஓடியது, ஒரு பெண்ணும், சமையலறையும்,கலராய் ஏதோ உணவு வகையறாவையும் காண்பித்து, தலைமுடி சீராய், மடிப்பு கலையாத புடவையோடு,முக்கியமாய் வியர்த்து வழியாமல்,தன் நீண்ட நெயில் பாலீஷ் விரல்களால் உப்பை அழகாய் தூவிக்கொண்டிருந்தாள். உடன் ஒரு மெல்லிய இசையும் ஒலித்தது. வாங்குங்கள் அயோடின் நிறைந்த இந்த உப்பை என்று கீச்சுக்குரலில் சொன்னாள். டி.வியை ஆஃப் செய்யவும் தோன்றாமல்,சாப்பிடவும் தோன்றாமல் தயிர் சாதத் தட்டையே வெறித்துக்கொண்டிருந்தேன் நான். பிள்ளைகள் பள்ளிவிட்டு வரும் சத்தம் கேட்டது. மீண்டும் வருமா இந்த உப்பின் யோசனை, இல்லை மீண்டு வருவோமா இந்த உப்பிலிருந்து ? மறுபடியும் உயிரைவாங்கும் இந்த உப்பின் சிந்தனையோடு கையைக் கழுவிக்கொண்டு கதவைத் திறந்தேன்.
22 June 2009
அன்புள்ள அப்பாவிற்கு
உன்னைப் பற்றி சொல்வதற்கு கொஞ்சம் நினைவுகளும்,உன்னைப் போற்றி சொல்வதற்கும் என்னிடம் சொற்ப வார்த்தைகளே உண்டு. உன் வித்தில் பிறந்தும் காயாகி, கனிந்து பின் உனக்கு நிழல் தரா மரம் நான் ஒவ்வொரு அமாவாசைக்கும் தலைக்கு தண்ணீர் ஊற்றிக்கொள்ளும்போது மறக்காமல் உன் நினைவுகளும் வந்து செல்கிறது. என்ன செய்வது உன் வயோதிகமே நமக்கிடையே ஒட்டுதலை ஏற்படுத்தாமல் போனது.
நான் யூ.கே.ஜி படிக்கறப்போ, நீ என் ஸ்கூலுக்கு க்ளாஸ் நடக்கறப்போ வந்து, ஜன்னல் வழியா என்னைக்கூப்பிட்டு சின்ன சின்ன முறுக்கும், பட்டர் பிஸ்கட்டும் எண்ணை படிந்த பேப்பரோடு கொடுத்துட்டு போவியே.அப்பவே சில ஸ்கூல் பசங்களெல்லாம், மிஸ் அங்க பாருங்க, ஒரு தாத்தா வந்து நிக்கறாரு ந்னு கூட இருக்குற பசங்க உன்னைக் கைய காட்டுனது தான் என் மனதின் அடி ஆழம் தொட்ட வார்த்தைகள்.
எனக்கு தந்தையாய் தெரிந்த நீ, மற்றவர் கண்களுக்கு தாத்தாவாகிப் போனாய். அது உன் உழைப்பின் வீரியம் என்பது நெடுநாள் கடந்துதான் எனக்கு தெரிந்தது. தெரிந்துமென்ன, உன் வயோதிகத்தின் கடைசி காலங்களில் உனக்கு அனேக நிமிடங்களில் ஆதரவாக நானில்லை. நான் மகளாக இருந்த சொற்ப கணங்கள் என் கண் முன் தெரிகிறது. ஏதோ அந்த மட்டுக்குமாவது உனக்கு நான் மகளாக இருந்திருக்கேனே.
உன் புஜத்தில் தளர்ந்த நரம்புகளுக்கிடையே இருக்கும் தள தள மருவைத் தான் அதிகம் நெருடியிருக்கேன், நினைவு தெரிந்து எனக்கும் உனக்குமான அதிக பட்ச நேசம் அதுதான். உன் வேலை நேரம் அப்படி. நமக்கிடையே ஒரு அழகான புரிதல் ஏற்படாமல் இருப்பதற்கு காலம் கூட சாட்சியாகிப்போனது.
ஒரு நாள் அம்மா என்னை ஆக்ரோஷமாக அடித்துத் தள்ள, வலி தாளாத நான் உன் வேலையிடத்தை தேடி வர, அவர்களிடம் கொஞ்சம் நேரம் கடன் கேட்டு, என்னை வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டு உன் உதடுகளும் உடம்பும் உதற அம்மாவை திட்டிவிட்டுப் போனாயே, பசுமையாய் நினைவிருக்கிறது.
அப்பா, இப்போது நீ இல்லை, உனக்கு பதிலாக நான் உன் வயதில், வடிவில் இருக்கும் அனைவரையும் அப்பா என்று அழைத்துவிடுகிறேன். குறிப்பாய் என் மாமனாரை. நீ இல்லாத குறையை அவர்தான் எனக்கு தீர்த்துவைக்கிறார். வழக்கமாய் என் பிறந்தநாளுக்கு அவர் எனக்கு பூ வாங்கித் தர மறப்பதில்லை, பூ வைக்கப் பிடிக்காத நானும், அதை மறுப்பதுமில்லை.
நீ உயிரோடு இருக்கும் போது குறைந்த பட்சம் ஆதரவாய் எதுவும் பேசாத நான், இப்போது எனக்கு(ம்) எழுத ஒரு இடம் இருக்கும் நிலையில் உன் மீதான என் உணர்வுகளை இறக்கி வைக்கிறேன்.
தந்தையர் தின வாழ்த்துப்பதிவுகளைப் பார்க்கும் போதெல்லாம், மறக்காமல் உன் ஞாபகமும் வந்து போனது. காலம் கடந்து உன் நினைவுகளைப் பகிர நினைத்தாலும், அதில் உன் வியர்வை வாசமே இல்லை.
யாருடமும் பகிர்ந்து கொள்ள முடியாத, உனக்குமெனக்குமிடையான ஒரு வலிமையான வெற்றிடத்தை நீ எனக்கு உருவாக்கித் தந்துவிட்டுப்போயிருக்கிறாய். அந்த வெற்றிடத்தையெல்லாம் இப்போதுதான் எனக்கு ஞாபகத்திற்கு வரும் சில, பல நினைவுகளை வைத்து நிரப்பிக் கொள்கிறேன். அந்த நினைவுகளெல்லாம் இனிமையாய் ஆரம்பித்து, கடைசியில் இப்படித்தான் முடிகின்றன, அப்பா இருந்திருந்தா..................
அக்காவின் கனவில் வந்து, மாமா உன்னோடுதான் இருப்பதாகவும், நீங்கள் இருவரும் எங்களை பார்த்துக்க்கொண்டிருப்பதாகவும் சொன்னாயாம், பார்த்துக்கொண்டிருப்பது உண்மையோ, பொய்யோ, இந்தக் கணத்தின் என் வருத்தமும், இதை எழுதும் போது கண்ணீர் மல்கியதென்னவோ நிஜம். நீ பார்த்துக்கொண்டிருப்பது நிஜமானால் மன்னிச்சுடுப்பா.
உன்னோடு இன்னும் மனதுக்கு நெருக்கமாய் வாழ கொடுத்து வைக்காமல் போனது நான் மட்டுமல்ல, வர்ஷினியும் தான். நீ இருந்திருந்தால் எப்படி பூரித்துப்போயிருப்பாய், உன் பேத்தி செய்யும் வேடிக்கைகளை நினைத்து.
இந்த வார்த்தைகளைத் தான், நாங்கள் சின்ன வய்தாய் இருக்கும்போது நீ அடிக்கடி சொல்வாய், //முருகன் தாத்தா இருந்தா பூரிச்சுப்போயிருப்பாரு, நீங்க பேசறத கேட்டு.//
நீ சொல்லிப்போன அதே வாசகங்கள் தான் இப்போது நான் வர்ஷினியிடம் சொல்கிறேன்.
இப்படிக்கு
காலனிடம் உன்னை அனுப்பிவைத்துவிட்டு
உன்னை நேசிக்கவில்லையே என்று வருந்தும்
உன் மகள் யசோதா கந்தசாமி.
நான் யூ.கே.ஜி படிக்கறப்போ, நீ என் ஸ்கூலுக்கு க்ளாஸ் நடக்கறப்போ வந்து, ஜன்னல் வழியா என்னைக்கூப்பிட்டு சின்ன சின்ன முறுக்கும், பட்டர் பிஸ்கட்டும் எண்ணை படிந்த பேப்பரோடு கொடுத்துட்டு போவியே.அப்பவே சில ஸ்கூல் பசங்களெல்லாம், மிஸ் அங்க பாருங்க, ஒரு தாத்தா வந்து நிக்கறாரு ந்னு கூட இருக்குற பசங்க உன்னைக் கைய காட்டுனது தான் என் மனதின் அடி ஆழம் தொட்ட வார்த்தைகள்.
எனக்கு தந்தையாய் தெரிந்த நீ, மற்றவர் கண்களுக்கு தாத்தாவாகிப் போனாய். அது உன் உழைப்பின் வீரியம் என்பது நெடுநாள் கடந்துதான் எனக்கு தெரிந்தது. தெரிந்துமென்ன, உன் வயோதிகத்தின் கடைசி காலங்களில் உனக்கு அனேக நிமிடங்களில் ஆதரவாக நானில்லை. நான் மகளாக இருந்த சொற்ப கணங்கள் என் கண் முன் தெரிகிறது. ஏதோ அந்த மட்டுக்குமாவது உனக்கு நான் மகளாக இருந்திருக்கேனே.
உன் புஜத்தில் தளர்ந்த நரம்புகளுக்கிடையே இருக்கும் தள தள மருவைத் தான் அதிகம் நெருடியிருக்கேன், நினைவு தெரிந்து எனக்கும் உனக்குமான அதிக பட்ச நேசம் அதுதான். உன் வேலை நேரம் அப்படி. நமக்கிடையே ஒரு அழகான புரிதல் ஏற்படாமல் இருப்பதற்கு காலம் கூட சாட்சியாகிப்போனது.
ஒரு நாள் அம்மா என்னை ஆக்ரோஷமாக அடித்துத் தள்ள, வலி தாளாத நான் உன் வேலையிடத்தை தேடி வர, அவர்களிடம் கொஞ்சம் நேரம் கடன் கேட்டு, என்னை வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டு உன் உதடுகளும் உடம்பும் உதற அம்மாவை திட்டிவிட்டுப் போனாயே, பசுமையாய் நினைவிருக்கிறது.
அப்பா, இப்போது நீ இல்லை, உனக்கு பதிலாக நான் உன் வயதில், வடிவில் இருக்கும் அனைவரையும் அப்பா என்று அழைத்துவிடுகிறேன். குறிப்பாய் என் மாமனாரை. நீ இல்லாத குறையை அவர்தான் எனக்கு தீர்த்துவைக்கிறார். வழக்கமாய் என் பிறந்தநாளுக்கு அவர் எனக்கு பூ வாங்கித் தர மறப்பதில்லை, பூ வைக்கப் பிடிக்காத நானும், அதை மறுப்பதுமில்லை.
நீ உயிரோடு இருக்கும் போது குறைந்த பட்சம் ஆதரவாய் எதுவும் பேசாத நான், இப்போது எனக்கு(ம்) எழுத ஒரு இடம் இருக்கும் நிலையில் உன் மீதான என் உணர்வுகளை இறக்கி வைக்கிறேன்.
தந்தையர் தின வாழ்த்துப்பதிவுகளைப் பார்க்கும் போதெல்லாம், மறக்காமல் உன் ஞாபகமும் வந்து போனது. காலம் கடந்து உன் நினைவுகளைப் பகிர நினைத்தாலும், அதில் உன் வியர்வை வாசமே இல்லை.
யாருடமும் பகிர்ந்து கொள்ள முடியாத, உனக்குமெனக்குமிடையான ஒரு வலிமையான வெற்றிடத்தை நீ எனக்கு உருவாக்கித் தந்துவிட்டுப்போயிருக்கிறாய். அந்த வெற்றிடத்தையெல்லாம் இப்போதுதான் எனக்கு ஞாபகத்திற்கு வரும் சில, பல நினைவுகளை வைத்து நிரப்பிக் கொள்கிறேன். அந்த நினைவுகளெல்லாம் இனிமையாய் ஆரம்பித்து, கடைசியில் இப்படித்தான் முடிகின்றன, அப்பா இருந்திருந்தா..................
அக்காவின் கனவில் வந்து, மாமா உன்னோடுதான் இருப்பதாகவும், நீங்கள் இருவரும் எங்களை பார்த்துக்க்கொண்டிருப்பதாகவும் சொன்னாயாம், பார்த்துக்கொண்டிருப்பது உண்மையோ, பொய்யோ, இந்தக் கணத்தின் என் வருத்தமும், இதை எழுதும் போது கண்ணீர் மல்கியதென்னவோ நிஜம். நீ பார்த்துக்கொண்டிருப்பது நிஜமானால் மன்னிச்சுடுப்பா.
உன்னோடு இன்னும் மனதுக்கு நெருக்கமாய் வாழ கொடுத்து வைக்காமல் போனது நான் மட்டுமல்ல, வர்ஷினியும் தான். நீ இருந்திருந்தால் எப்படி பூரித்துப்போயிருப்பாய், உன் பேத்தி செய்யும் வேடிக்கைகளை நினைத்து.
இந்த வார்த்தைகளைத் தான், நாங்கள் சின்ன வய்தாய் இருக்கும்போது நீ அடிக்கடி சொல்வாய், //முருகன் தாத்தா இருந்தா பூரிச்சுப்போயிருப்பாரு, நீங்க பேசறத கேட்டு.//
நீ சொல்லிப்போன அதே வாசகங்கள் தான் இப்போது நான் வர்ஷினியிடம் சொல்கிறேன்.
இப்படிக்கு
காலனிடம் உன்னை அனுப்பிவைத்துவிட்டு
உன்னை நேசிக்கவில்லையே என்று வருந்தும்
உன் மகள் யசோதா கந்தசாமி.
Subscribe to:
Posts (Atom)